மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 7 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 22



பாகம் : 22
பிரான்ஸ் மற்றும் ஆங்கில படைகள்
பிரான்ஸ் மற்றும் ஆங்கில படைகள் சிஸிலியில் சந்தித்துக் கொண்டன. இரு படைகளுக்கும் நடுவே சரியான நடைமுறை யும், நட்புறவும் ஏற்படாததால் நெடுநாட்கள் சிஸிலியில் தங்கியிருந்தன. அதுவரை அக்ரா நகர் அடைந்த சொற்பமான ஜெர்மனி படைகள் அங்கு காத்திருந்தன. இறுதியில் ஒரு வழி யாக பிரான்ஸ் படைகள் சிஸிலியை விட்டு கிளம்பின. அதற்கு பத்து நாட்கள் கழித்து ஆங்கில படைகளும் பின் தொடர்ந்தன. எல்லாப் படைகளும் அக்ராவில் ஒன்று சேர்ந்தன.
சைப்ரஸில் ஆங்கில மன்னன் ரிச்சர்டு மணற்புயலால் தாக்கப் பட்டான். சைப்ரஸ் தீவு பைசாந்திய சக்கரவர்த்தியின் ஆளுகை க்கு உட்பட்டிருந்தது. ரிச்சர்டு பைசாந்தியருடன் சண்டையிட்டு சைப்ரஸை வென்று அங்கு சிறிது நாள் ஓய்வு பெற்றான். பின்னர் ஸலாவுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட ஜெருசலத் தின் மன்னன் உதவி கேட்டதன் பேரில் அக்ரா சென்றான்.
முஸ்லீம்களின் எதிர்ப்பு
முன் சொன்னது போல் மூன்று படைகளும் சேர்ந்ததால் சந்தேக மில்லாமல் சிலுவைப் படை மிகவும் பலம் வாய்ந்ததாகியது. ஸலாவுத்தீன் எண்ணற்ற முறை முயற்சித்து தாக்கியும் அக்ரா வின் முஸ்லீம்களை காக்க முடியவில்லை. போரிட்ட முஸ்லீம் படைகளுக்கு சூழ்நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
587 A.H.(1191 C.E.) ஜுமதா அத் தானியாஹ் 17 ல் எதிரிகள் அக்ரா வை வெற்றி கொண்டு மதில்சுவருக்கு மேலே அவர்களின் கொடிகளை உயர்த்திக் காட்டினர். ஸலாவுத்தீன் அக்ராவில் தாக்கப்படும் முஸ்லீம் மக்களுக்காக தன் தலைவர்களுடன் கூடி பேசினார். எதிரிகளின் பயமுறுத்தும் மகிழ்ச்சியினால் அக்ரா முஸ்லீம்கள் நடுங்கினர். ஆமாம், எதிர்பார்த்த அதுதான் நடந்தது. முன்னர் நடந்த கொடுமைகள் மீண்டும் நடந்தது. முஸ்லீம்களை சித்திரவதை செய்தும், வெட்டியும் கொன்றனர். ஸலாவுத்தீன் அவர்கள் மீது காட்டிய இரக்கத்தையும், கருணையையும் சிறிதளவு கூட சுத்தமாக காட்ட மறுத்தனர். பூல் என்பவரின் அறிக்கைப் படி, 587 A.H.(16 AUGUST 1191) 23 ரஜப் மாதத்தில் ரிச்சர்டு 2,700 முஸ்லீம்களை சிலுவைப் போராளிகளின் முகாமில் வைத்துக் கொன்றான். வாசகர்களே அக்ராவில் முஸ்லீம்களுக்கு உண்மையாக நடந்த கொடுமைகளை கணினியில் கிடைக்கும் பூலின் அறிக்கையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவரின் அறிக்கையின் படி எதிரிகள் 60,000 முஸ்லீம்களைப் படுகொலை செய்தனர். ஒரு சில வசதிபடைத்த முஸ்லீம்களைத் தவிர, அது கூட அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ததற்காக விட்டு வைத்தனர். மிஷுத்தின் அறிக்கைப் படி, அக்ராவின் வெற்றியை படைவீரர்கள் பெரிய விருந்து வைத்து, பக்கத்து தீவுகளிலிருந்து விலை மாதர்களை வரவழைத்து அருவருக்கத்தக்க வகையில் வந்த குறிக்கோளையும் மறந்த வண்ணம் கேளிக்கையுடன் கொண்டாடினர்.
எதிரிகளின் அக்ரா வெற்றிக்குப் பின் அவர்களின் பிரம்மாண்ட படையுடனும், பலத்துடனும், ஐரோப்பா, ஆசியாவிலுள்ள லத்தீன் நாடுகளின் நேசநாடுகள் ஒத்துழைப்புடனும், இன்னும் பிற நாடுகளின் ஆதரவுடனும் ஸலாவுத்தீனை எதிர்த்தனர். அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக போரிட்டு முன்னர் இழந்த பகுதிகளை மீட்க ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்தது. இருந்தாலும் இரண்டாண்டாக போரிட்டு அவர்களால் அக்ராவை தவிர வேறு எந்த நகரத்தையும் பிடிக்க முடியவில்லை. சில படை வீரர்களை இழந்திருந்தாலும் ஸலாவுத்தீனின் இராணுவம் எதிர்த்தவாறு இருந்தது. எதிரிகள் மேலும் எந்த வெற்றியும் பெறாததற்கு சிஸிலியில் பிரான்ஸ், ஆங்கில மன்னர்களுக்கு இடையே இருந்த ஒத்துழையாமை, பிணக்குமே காரணம். இன்னொன்று, ஓடிக்கொண்டிருக்கும் ஜெருசல மன்னனுக்கும், டயர் ஆட்சியாளர் மர்க்விஸ் கன்ராட் மோண்டிக்கும் இடையில் இருந்த சுமூக மில்லாத நட்பும்  ஆகும். ஆங்கில மன்னன் ஜெருசல மன்னனைச் சார்ந்தும், பிரான்ஸ் மன்னன் ஜெருசலத் தை ஆள ஆசைப்படும் டயர் ஆட்சியாளரை சார்ந்தும் இருந்தனர். அக்ராவின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒற்றுமை இல்லாமல் போனது. முடிவில், இறக்கும் வரை ஜெருசலத்தின் மன்னனே தொடர்ந்து ஆளட்டும் என்றும், அதன் பிறகு கன்ராட் மோண்டி ஜெருசலத்தை ஆளட்டும் என்று முடிவாகியது. பிரான்சின் மன்னன் ஏதோ காரணகாரியமாக பிரான்ஸ் சென்றுவிட ஆங்கில மன்னன் ரிச்சர்ட் தலைமையில் முஸ்லீம்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. அவர் இழந்த பகுதிகளை ஸலாவுத்தீனிடமிருந்து மீட்க விரும்பினார். இரு படைகளுக்குமிடையே பல தாக்குதல்கள் தொடர்ந்தன. அதில் பிரபலமானது அர்ஸுஃப். அதில் எதிரிகள் முஸ்லீம்களை தோற்கடித்தனர். இதனால் ஹத்தீனில் முஸ்லீம்களை சுலபமாக பழி தீர்த்துவிடலாம் என்று நினைத்தனர்.
போர் நிறுத்தம்
இருதரப்புக்கும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பலமுறை ( இரு சந்தர்ப்பங்களுக்கு ஒரு முறை )சிலுவைப் போராளிகள் ஜெருசலத்தை நெருங்கினார்கள். ஆனால் கைப்பற்ற முடியவில்லை. தனக்கெதிராக எதேனும் சதி இருக்குமோ என்று ஆங்கில மன்னன் நினைத்தான். அவர்களால் மேற்படி எந்த நகரங்களையும் வெற்றி கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு மற்ற போரைவிட இந்த போர் வித்தியாசமாக இருந்தது. ஸலாவுத்தீனாலும் அவர்களை கடற்கரை வழியாக வோ, தோற்கடித்து கடல் வழியாகவோ விரட்ட முடியவில்லை. மிகுந்த சோர்வுக்கு பிறகு, இருபடைகளும் சமாதானத்திற்கு வந்தனர். முடிவு எவ்வளவு முயன்றும் எதிரிகளால் ஜெருசல த்தை வெற்றி கொள்ள முடியவில்லை. சமாதான உடன்படிக்கை யின் சில ஒப்பந்தங்களுக்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். இறுதியில் 588 A.H.(1192 C.E.)ல் இருவரும் ஒத்துக் கொண்டு சமாதானமாயினர். அதன் விவரமாவது :
·         சிலுவைப் போராளிகள் டயர் நகரத்திலிருந்து ஹைஃபா வரை கடற்கரை பகுதியில் தங்கி இருப்பார்கள்.
·         கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திற்கு வரி ஏதும் செலுத்தாமல் சென்று வருவார்கள்.
·         இந்த போர் நிறுத்தம் மூன்று ஆண்டுகளும், எட்டு மாதங்களுக்கு மட்டுமே.
ஃப்ராங்க்ஸ் ஏற்கனவே வென்ற கடற்கரை நகரங்களை இணைத்து புதிய ஜெருசலம் உண்டாக்கியது. அக்ரா அதன் தலைநகரமாக ஆகியது. மூன்றாம் சிலுவைப் போருக்கு பிறகு, சிங்க இருதயம் படைத்த ஆங்கில மன்னன் ரிச்சர்டு மிகவும் பிரபல்யமானான். போர் நிறுத்தத்துக்கு பின் இங்கிலாந்து திரும்பி சென்றான். மூன்றாம் சிலுவைப் போர் பல வீரர்கள் இறப்பிற்கும், பல ஊர்கள் எறிக்கப்பட்டும், ஜெர்மனிய சக்கரவர்த்தி ஆற்றில் விழுந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்தது. அக்ரா நகரம் வென்றதை தவிர ஃப்ராங்க்ஸ் எதுவும் சாதிக்கவில்லை. ஐரோப்பா லாபத்தை விட, நிறைய இழந்திருந்தது. ஸலாவுத்தீன் வருகைக்கு முன் முஸ்லீம்கள் பாலஸ்தீனின் மீது கருத்தை செலுத்தவில்லை. இப்போது ஹத்தீன் போருக்கு பிறகும், ரம்லாஹ் ஒப்பந்தத்திற்கு பிறகும் பாலஸ்தீனம் முஸ்லீம்கள் பொறுப்பில் வந்தது. மேலும், பாலஸ்தீன் சரியாக லெபனானின் டயர் நகருக்கும், அக்ரா நகரத்திற்கும் குறுக்கே அமைந்திருந்தது. ஸலாவுத்தீன் எதிர்களை ஐந்தாண்டாக பலம் கொண்ட மட்டும் தடுத்தும் மிகவும் குறிகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். இளவர சர்களை ஒருங்கிணைத்தார், எதிரிகளை விரட்டி மீண்டும் ஜெருசலத்தை பெற்றார், முஸ்லீம்களின் பலத்தையும், வெற்றி யையும் சரியான முறையில் பயன்படுத்தி வட இராக் (குர்திஸ்தான்), அகன்ற சிரியா, எகிப்து, பாலஸ்தீன், ஏமன், பர்காஹ் உள்ளடக்கிய மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உண்டாக்கினார்.

கருத்துகள் இல்லை: