மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 11



பாகம் : 11
அப்பாஸிட் கலீஃபாவின் பேரில் மதபோதனை
உள் நாட்டு, வெளி நாட்டு சதி திட்டங்களை முறியடித்து நிலையான ஆட்சியை அமைத்த பின் அவர் அடுத்த நடவடிக்கையாக சுதந்திரத்திற்கான வழியை நாடினார். மிகைப் படுத்தி கூற வேண்டுமென்றால் எகிப்தியர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குடும்பத்தினரின் ஷியா வழி முறையை கடை பிடித்து வந்தனர். ஸலாவுத்தீன் அவர்களை உலகில் பெரும் பான்மையோரின் வழிமுறையான சுன்னி பிரிவு வழிமுறையில் அழைத்தார். மக்கள் நேர் வழியின் பால் வருவதற்காக அவர் புகழ் பெற்ற நஸரியா, கமிலியா என்று இரு மத கல்விக் கூடங்களை அமைத்தார். நூருத்தீன் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகளை ஃபாத்திமிட் கலீஃபாவின் பெயரை விடுத்து அப்பாசிட் கலீஃபாவின் பெயரில் நடத்த ஆலோசனை கூறினார். இதை நூருத்தீன் மட்டுமின்றி ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகமும் வரவேற்றது. ஆனால் ஸலாவுத்தீன் மேலும் சில காலங்கள் அம் மக்களுக்கு சுன்னி வழிமுறையை நன்றாக தெரியப் படுத்திய பிறகு போதனை முறையை மாற்றலாம் என்று நினைத்தார்.
கடைசி ஃபாத்திமிட் கலீஃபா அல் அதித் உடல் நலம் குன்றிய போது, நூருத்தீனின் வற்புறுத்தலின் பேரில் ஸலாவுத்தீன் தனது ஆலோசகர்களை கூட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார். ஆலோசகர்களில் அரபியரல்லாத மத போதகரான அல் அமீர் அல் ஆலிம் என்பவரிடம் பொறுப்பு விடப்பட்டது. முதல் முறையாக அவர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஃபாத்திமிட் கலீஃபாவுக்கு பதிலாக அப்பாசிட் கலீஃபாவின் பேரில் போதனை நிகழ்த்தினார். ஸலாவுத்தீன் தனது ஆதரவாளர்களிடம் இதை நோய்வாய்ப் பட்டுள்ள ஃபாத்திமிட் கலீஃபாவுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டார். மேலும், ஃபாத்திமிட் கலீஃபா உடல் நலம் தேறினால் அவர் தானாகவே புரிந்து கொள்ளட்டும் ஒரு வேளை இறந்து போனால் அது அவருக்கு தெரியாமலே போகட்டும்” என்று கூறினார். ஆம் இது ஸலாவுத்தீனின் நல்ல உள்ளம், நன்றாக வாழ்ந்த ஒரு மன்னன் தன் பெயர் போதனையில் நீக்கப்பட்டு விட்டது என்று மேலும் வேதனை அடைய வேண்டாம் என்ற அவரின் கருணை. அப்பாசிட் கலீஃபாவின் பேரில் துவங்கிய வெள்ளிக்கிழமை போதனை உரையை மக்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டனர். கடைசி ஃபாத்திமிட் கலீஃபா அல் அதீதி 567 A.H. (1171 C.E.) ல் காலமாக அத்துடன் ஃபாத்திமிட்களின் ஆட்சி முடிவுற்றது.
அல் அதீதின் இறப்பிற்கு பின்பு ஸலாவுத்தீன் எகிப்தின் சிறந்த தலைவரானார். மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவித்தார். அல் அதீதின் குடும்பத்தினரை நன்கு அக்கறையுடனும், கருணையுடனும் கவனித்துக் கொண்டார்.
நூருத்தீனுடனான செயல்பாடு
ஸலாவுத்தீன் நூருத்தீனுடனான உறவை மிகவும் விரும்பத்தக்க அளவில் வைத்துக் கொண்டார். ஏனென்றால் நூருத்தீனின் தந்தை இமாதத்தீன் சங்கி தான் ஸலாவுத்தீன் தந்தைக்கும், சித்தப்பா ஷிர்குஹுக்கும் புதிய வாழ்க்கையை தந்தவர். தன் மீதும், தனது தந்தையின் சகோதரர் ஷிர்குஹ் மீதும் சிறு வயதிலிருந்து  நூருத் தீன் அவர்கள் காட்டிய நட்பையும் நினைவு கூர்ந்து நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்டார். மிக விரைவில் தொடர்ந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் அப்பாசிட் கலீஃபாவுக்கு பதில் நூருத்தீனின் பெயரில் உரை துவங்க உத்தரவிட்டார். நூருத்தீனின் பெயர் தாங்கிய நாணயம் வெளியிட்டார். அரண்மனை பொக்கிஷத் திலிருந்து விலை மதிப்பில்லாத பரிசுகளை அளித்து தன் இராஜ விசுவாசத்தை வெளிப் படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் சில இராணுவ தளபதிகளும், நம்பிக்கை துரோகிகளும் ஸலாவுத்தீனின் கீழ்படியாமல் எகிப்தில் வாழ மறுத்தனர். அவர்கள் ஸலாவுத்தீனுக்கும், நூருத்தீனுக்கும் இடையே அபிப்பிராய பேதத்தை விதைத்து வெறுப்புத் தீயையும் பகையையும் வளர்த்தனர். சில காரியங்களில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி ஸலாமுத்தீனுக்கும், நூருத்தீனுக்கும் இடையே முரண்பாடு களினாலும், உத்தரவை மீறுவதாலும் கிடைத்தது. சில நேர்மை யாளர்கள் இருவருக்கும் இடையே வளரும் விரோதத்தை எச்சரித் தனர். இந்த பகையால் ஒளிந்திருக்கும் எதிரிக்கு தான் நன்மையை விளைவிக்கும் என அறிந்திருந்தனர். மிகக்குறிகிய கால இடை வெளியில் அவர்கள் இருவருக்குமிடையேயான நட்பு, நம்பிக்கை, உண்மை பாதுகாக்கப்பட்டது. நூருத்தீன் 569 A.H. (1173 C.E.) ல் இறக்கும் வரை ஸலாவுத்தீன் அவருடனான விசுவாசத்தில் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். அவரின் முன்னேற் றத்திற்கு ஏற்றவாறு எதிரிகளும் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை: