சலாவுத்தீன் அல் அய்யூபி
ஹத்தீன் போரின் மாவீரரும்
சிலுவைப் போரில் ஜெருசலத்தை மீட்ட விடுதலை
வீரரும்
532 – 589 ஹிஜ்ரி/1137 – 1193
கி.பி.
-------------------------
தமிழாக்கம்: கூ. செ. சையத் முஹமது.
எல்லாம் வல்ல அல்லாஹ்
ஒருவனுக்கே அனைத்துப் புகழும், சாந்தியும், சமாதானமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம், சஹாபாக்கள், தாபியீன்கள், தபா அத்தாபியீன்கள் கலீஃபாக்கள், உத்தமர்கள்
மற்றும் தீன் வழியில் போரிட்ட மாவீரர்களூக்கும் உரித்தாகுக.
தீன், ஜிஹாத் வழியில்
இஸ்லாத்தில் போரிட்டு பெரும் மாற்றங் களை அரசியல் உலகில் வகுத்த மாபெரும் வீரர்களை
நினைவு கூறும் போது அது நம்மை பெருமையடைய செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் நன்கு
படித்த நம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு கூட நம் மார்க்க வரலாறு தெரியவில்லை. ஏனென்றால்,
மற்ற மதத்தினரைப் போல இஸ்லாத்தில் தனி மனித புகழ் பாடப் படுவதில்லை, சிலைகளோ, விழாக்களோ
எடுத்து நினைவு படுத்தப்படுவதில்லை. ஆனாலும் தினசரி செய்திகள் போலவோ, சினிமா,
விளையாட்டு, சமூகத்தை அறிந்து கொள்ள காட்டும் சாதாரண ஆர்வம் கூட இஸ்லாமிய
சரித்திரத்தை தெரிந்து கொள்ள காட்டுவதில்லை என்பது வேதனையான விஷயம். நாமும்
அறிந்து நம் குழந்தைகளுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் கண்டிப்பாக
தெரியப்படுத்த வேண்டிய வரலாறு இது. உலகில் ஒரு புள்ளியாக இருந்து, எவருமே அவ்வளவாக
அறியாத, நாகரீக மறியாத, கல்வியறிவு அற்ற அரேபிய சமுதாயத்திலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலமாக வேகம்
பெற்ற (இஸ்லாம் ஆதம் அலைஹி வஸல்லம் காலத்திலிருந்தே இருக்கிறது.) ஒரு மார்க்கம் இஸ்லாம்.
இதை விட உறுதியான ஒரு உலோகமோ, சக்தியோ ஒன்று உலகில் இல்லை எனும் அளவில் பரந்து இன்னும்
(ஸுப்ஹானல்லாஹ்) விரிந்து சென்ற வண்ணம் எதிரிகளுக்கு மாபெரும் ஆச்சரியத்தை
உண்டாக்கிக் கொண்டிருக் கிறது.
இதை தீன், ஜிஹாத் மற்றும்
தன்னிகரற்ற வீரத்தின் வழியில் ஆரம்பத்திலிருந்து துவக்கியவர்கள் வரிசையில்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் உடன் வாழ்ந்த உம்ர் பின் கத்தாப் (ரலி), அலி
பின் அபுதாலிப் (ரலி), அப்பாஸ் (ரலி), ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) ,
காலித் பின் வாலித் (ரலி) போன்ற மாவீரர்களையும், போர்களில் உயிர் நீத்த சில சஹாபாக்களையும்
சமுதாயம் நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்களால் ஒரு முஸ்லீமின் உயரிய
பதவி, நேரடி சொர்க்கத்தின் திறவுகோல் ஜிஹாத் மட்டுமே என்று
வழிகாட்டப்பட்டிருக்கிறது. இது சாதாரண மக்களான நமக்கு சாத்தியமில்லாவிட்டாலும்,
நாடாளும் முஸ்லீம் மன்னர்களுக்கு இது மாற்றுக் கருத்து இல்லாத கடமையாகும். இந்த ஜிஹாதை
அடியோடு மறந்துவிட்டு தானும், தங்களது வாரிசுகளும் மட்டுமே ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டு
மேற் கத்தியவர்களின் கைப்பாவை ஆகிப்போன முஸ்லீம் ஆட்சியாளர் களைத் தான் இன்று
உலகம் முழுவதும் காண நேரிடுகிறது.
எகிப்து நாசர்களும்,
சதாம்களும், கடாஃபிகளும், பின்லேடன்களும், நல்லவர்களா என்பது நமக்கு தெரியாது அது
நமக்கு தேவையு மில்லை. ஆனால் மேற்கத்தியவர்களை எதிர்த்தவர்கள். அதனாலே யே
ஆட்சியையும், உயிரையும் இழந்தவர்கள். இன்றைக்கு ஜன நாயக முறையில் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட சில முஸ்லீம் நாடுகளின் அதிபர்களைக் கூட உள் நாட்டு கலவரத்தைத்
தூண்டி மேற்கத்தியவர்கள் விரட்டி அடிப்பதை நாம் காண்கிறோம். அன்றி லிருந்து இன்றுவரை
ஷியாக்கள் ஆட்சி செய்யும் ஒரே நாடு ஈரான். இன்று ஏதோ உலகில் மேற்கத்தியவர்களை
எதிர்க்கும் ஒரே நாடு ஈரான் ஒன்று தான் என்பது போல் விளம்பரம் செய்யப் படுவதை யும்
பார்க்கிறோம். யாரை அழிப்பதற்கு யாரை உயர்த்துகிறார்கள் என்பது உண்மை சரித்திரம்
அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த 21 ம் நூற்றாண்டிலும் யூதர்களுக்கும்,
கிறிஸ்தவர்களுக்கும், ஷியாக் களுக்கும் வெளிப்படையான தேவாலயங்களும், மசூதிகளும்
ஈரானில் உண்டு. ஆனால், உலகின் பெரும்பான்மையான சுன்னி முஸ்லீம்களுக்கு மசூதி
கட்டிக்கொள்ள அனுமதி இல்லை. சரித் திரத்தில் வழிதவறிய ஷியா கூட்டத்தார்களின்
ஆட்சியாளர் களையும், அவர்களின் அருவருக்கத்தக்க துரோகச் செயலையும், இஸ்லாத்தை
வேரோடு அறுத்தெரிய மேற்கிலிருந்து தொடர்ந்து 900 வருடங்களுக்கும் மேலாக வந்து (உலக
வரலாற்றில் பல்லாண்டு களாக நடந்த சிலுவைப் போர்) லட்சக்கணக்கில் முஸ்லீம்களை
கொன்று குவித்த (முழங்கால் அளவு இரத்த வெள்ளத்தில் என்று மாற்று மத சரித்திர
ஆய்வாளர்களே எழுதிய) ஐரோப்பிய மத மற்றும் அரசுப் போராளிகளை சரித்திரத்தின் இடையே
நெஞ்சு நிமிர்த்தி எதிர்த்த சில இஸ்லாமிய மன்னர்களையும், வீரர்களை யும் நாம்
தெரிந்து கொள்ளவில்லை. இதை நம் சமுதாயம் கண்டிப் பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் எங்கே ஜிஹாதை
இழந்தது என்றால் நேர்மையான கலீஃபாக்களின் (சரித்திரம் இவர்களை RIGHTLY KHALIFAS என்றே
குறிப்பிடுகிறது) ஆட்சிக்குப் பிறகு வந்து உலகம் வியக்கும் வண்ணம் பரந்த பூமியை
பின்னாளில் ஆண்ட பிரிட்டிஷாருக்கு முன்பே ஆண்ட இஸ்லாமியர்கள் தவறான வழியில் இறை
அச்சம் இன்றி போனதினால் தான். அதே நேரத்தில் இன்று உலகின் பெரும் பான்மையான
கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாமியர்களின் ஆட்சி தான் அடிப்படை ஆராய்ச்சி அமைத்துக்
கொடுத்தது. கட்டிடக்கலை இலக்கியம், கல்வி, இன்றிருக்கும் அலுவலக நிர்வாகம்,
மருத்துவ துறை என்று அனைத்துத் துறைகளிலும் வானளாவ உயர்ந்து இருந் தார்கள். இதற்கு
சிறந்த ஆதாரம் இன்றைய எல்லா நவீன கண்டு பிடிப்புகளுமே அதிகபட்சம் இரு
நூற்றாண்டுகளின் இடைவெளி யில் கண்டு பிடிக்கப்பட்டது தான். ஆனால் ஆச்சரியம்
இஸ்லாமி யர்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற் றாண்டு வரை இவைகளை
மின்சாரமில்லாமலும், ஆரம்ப நிலையிலும் பயன்படுத்தி இருந்தனர். இவைகள்
இஸ்லாமியர்களின் ஆட்சியின் போது ஸ்பெயின், ஃப்ரான்ஸ் மூலமாக ஐரோப்பா கண்டத்தில்
பரவியது. இதைத் தனிக் கட்டுரையாக இன்ஷா அல்லாஹ் வேறொரு முறை பார்ப்போம். அதே சமயம்
தன் இனம், குடும்பம், சந்ததியே ஆளவேண்டும் என்று பார்த்தார்கள். அதனால் தங்களுக் குள்ளேயே
கொலைகளையும், துரோகங்களையும் சர்வ சாதாரண மாகச் செய்து கொண்டார்கள். எளிமை யை
மறந்து ஆடம்பரமான அரண்மனைகள், தங்கள் உயிர் இறைவனின் நாட்டப்படிதான் போகும் என்பதை
மறந்து மிகுந்த பொருட் செலவில் தங்களுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்திக்
கொண்டார்கள். ஐம்பது மைல்களுக்கு ஒரு சுல்தான் இருந்து கொண்டு சொகுசு வாழ்க்கை
வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இறைவனுக்கு கோபம்
ஏற்படுத்தாதா? ஆல இம்ரானில் அல்லாஹ் தான் விரும்புபவர்களுக்கு தான் ஆட்சி அதிகாரம்
தருவேன் என்று சொல்லி இருக்கிறான். அப்படித்தந்த அல்லாஹ் அல்லவா அந்தந்த
சுல்தானுக்கும், மன்னருக்கும், சக்கர வர்திக்குமான உயிருக்கும், ஆட்சிக்கும்
பொறுப்பு ஆளுமையின் போதையில் அதை மறந்து போனார்கள்.
அந்த வரிசையில் எகிப்தில்
மாவீரர் சுல்தான் யூஸுஃப் ஸலாவுதீன் அல் அய்யூபி சரியான வழியில் மக்களை வழி நடத்தி
இஸ்லாமிய உலகில் கொடியை உயர்த்திப் பிடித்தவர். சிறு வயதிலிருந்து தீனை யும்,
ஜிஹாதையும் நன்கு உணர்ந்து கற்று தேர்ந்தவர். பகுதி பகுதி யாக அலைந்து திரிந்து
சிறு சிறு முஸ்லீம் ஆட்சியாளர்களை கெஞ்சி புரியவைத்து சிலுவைப் போராளிகளுக்கு
எதிராக ஜிஹா தின் வழியிலே ஒன்று திரட்டியவர். சில முஸ்லீம் ஆட்சியாளர் களே
எதிரியுடன் சேர்ந்து இவருக்குத் தான் எப்படி எல்லாம் துரோ கம் செய்திருக்கிறார்கள்
தெரியமா?. இன்றைக்கும் நம்மிடையே கமாலுத்தீன், ஷரீஃபுத்தீன், ஜியாவுத்தீன், மொய்தீன்
என்று தீன் களில் முடியும் பல பெயர்களை சுமர்ந்திருப்பவர்களே உங்கள் பெயர்களுக்கான
காரணகர்த்தா இவர். உங்களுக்கு பெயரிட்ட மூதாதையர்கள் கூட காரணமறியாமல் தெரிந்து
கொள்ள மறந்த வரின் சரித் திரம் இது. இது எகிப்திய அரேபிய வரலாற்று ஆசிரி யரால்
அரபியில் எழுதப்பட்டு பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்ட வரலாறு. அதை நான்
என்னால் முடிந்த தமிழில் மொழி பெயர்த்து நம் தமிழ் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும்
என்ற எண்ணத்தில் எழுதியிருக்கிறேன். இதில் ஏதேனும் சரித்திரப்பிழை இருந்தால் நான்
பொறுப்பல்ல. சொற்பிழையோ, இலக்கணப் பிழையோ இருப்பின் தெரியப்படுத்தினால் இந்த
சகோதரன் திருத்திக் கொள்ள தயாராய் இருக்கிறேன். வாருங்குள் நுழை வோம்.
“பூமியில் பலவீனப் பட்டவருக்கு நாம்
உபகாரம் செய்யவும், அவர்களை தலைவர்களாக்கவும், நாட்டுக்கு வாரிசுகளாக்கவும் நாம்
நாடினோம்” – அல் கஸஸ் 28-5.