இரண்டாம் உலகப்போருக்குப்
பின் அமெரிக்கா உலகின் வல்லரசு நாடாக உருவாகியது. அமெரிக்காவுக்கும்,
ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போர் சில நாடுகளுக்கு சாதகமாக அமைந்தது. பண்டுங்க்
மாநாடு கூட்டு சேரா நாடுகளின் தலைவர்கள் இந்தோனேஷியாவின் சுகர்னோ, இந்தியாவின்
நேரு மற்றும் எகிப்தின் நாசர் ஆகியவர்களுக்கு சாதகமாக அமைந் தது. உலக உற்பத்தி
மேற்கத்திய நாடுகளையே சார்ந்தும், உலக அதிகாரம் லண் டன், பாரிசிலிருந்து
அமெரிக்காவுக்கு இடம்மாறியது. இருபதாம்நூற்றாண்டுகளில் ஐரோப்பியா பொருளாதாரத்தில்
முக்கிய இடத்தில் இடம் பிடிப்பதை முஸ்லீம்கள் கணிக்கத்தவறிவிட்டனர். இஸ்லாமிய
உலகில் முக்கிய தலைவர்களாக ஜமாலுத் தீன் ஆஃப்கானி, முஹம்மது அப்தூஹ், கெமல்
அடாடுர்க், சுகர்னோ, நாசர் மற்றும் போமிடியன் ஆகியோர் உருவெடுத்தனர். அவர்கள் தங்கள்
செயல்களினால் உச்சத் தை எட்டினர். மேற்குலகின் பொருளாதாரத்துடன் போட்டியிட
அப்போதைய ஈரா னின் அதிபர் முஸத்தக் 1930
ல் எண்ணெய் நிறுவனங்களிடம் சமமான பங்குக்கு உரிமை கோரினார். ஆனால், அரேபிய
ஷெய்குகளின் எண்ணெய் நிறுவனங்களு டனான உறவு அதற்கு பெரும் தடையாகப் போனது.
மேற்குலகிலிருந்து விடுத லை பெற நடந்த அல்ஜீரியாவின் உள்நாட்டு கலவரம் இன்றளவும்
பேசப்படுகி றது. ஆப்கானிஸ்தானின் தோல்வி ரஷ்யாவை அமெரிக்காவுடனான போட்டியில்
இருந்து விலகிவிட்டதாகவே கருத வைத்தது. 1990 களில் அமெரிக்காவின் பொரு ளாதார,
அரசியல் மற்றும் இராணுவ சவாலை இதுவரை எந்த நாடுகளாலும் ஏற் றுக்கொள்ளப் படவில்லை.
பல முஸ்லீம் நாடுகள் வாங்கிய கடனுக்கு வழி தெரியாமல் திணறினார்கள். பல
வாக்குறுதிகளைக் கொடுத்த பாகிஸ்தான் 1971 ல் கைவிரித்து விட்டது. சௌதி அரேபியாவின்
எண்ணெய் வள வருமானம் ஈராக் மற்றும் ஈரானிய போர்களில் கரைந்தது.
அட்லாண்டிக்கிலிருந்து பசிபிக் வரை ஐந்தில் ஒரு நாடு கடனில் மூழ்கின. சீனா மட்டுமே
கம்யூனிச கொள்கையாலும், புரட்சி தலைவர்களாலும் மேற்கத்திய வங்கிகளிடமிருந்து
தப்பியது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலால், யாருக்கும் பாதாளத்தில்
போய்கொண்டிருக்கும் உலக பொருளாதாரத்தில் கவனம் திருப்பாமல் அமெரிக்கா பார்த்துக்
கொண்டது. முழுப்பழியையும் இஸ்லாமியர்க ளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிராகத்
திருப்பி ருத்ரதாண்டவம் ஆடியது, ஆடிக்கொண்டிருக்கிறது. 3000 பேர் தங்கள் நாட்டில்
கோபுரத்தாக்குதலில் இறந்து போனதற்கு, எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்காமல்
அதிகபட்சமாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான் இன்னும் சில முஸ்லீம்
நாடுகளில் 20 லட்சம் பேர்வரை கொல்லப்பட்டனர். இதில் காரணம் தெரியாமலேயே செத்து
மடிந்த திருமணக் கூட்டத்தினர், தொழுகை நடத்திவிட்டுத் திரும்பியவர்கள் அதிகம்
பேர். இதில் எங்கிருந்து யாருக்கு பொருளாதார சிந்தனை வரும். ஆப்கானிஸ்தானும்,
ஈராக்கும் போர் பூமியாகவே ஆக்கப்பட்டன. அமெரிக்கா முஸ்லீம் நாடுகளை தற்போது ஒரு
பேக்கரியின் அடுப்புபோல சூடாகவே வைத்திருக்கிறது. அதில் பாக்தாத் தீயின் மையமாக
இருக்கிறது