பதினெட்டு, பத்தொன்பதாம்
நூற்றாண்டு களில் ஓட்டோமான் பேரரசும், ரஷ்யாவும் நிறைய போர்களை சந்தி த்தன. மேலும்
வெளி நாட்டு அர்சுகள் ஓட்டோமான் பிரதேசங்க ளைக் கைப்பற்ற ஆவல்கொண்டன. இதனால்,
பேரரசு ஐரோப்பிய நாடுகளுடன் இராணுவக்கூட்டு ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய கட் டாயமானது.
இடையில் போனபார்ட் எகிப்திலிருந்து மம்லுக்குக ளை வென்று அங்கு எகிப்தியர்களின்
ஆட்சியை கொண்டு வர விரு ம்பினார். அதற்காக கெய்ரோவில் தாக்குதல் நடத்தி
கொள்ளையடித் தார். மம்லுக்குகளை 1798 ல் பைரமிட் என்ற இடத்தில் வெற்றி பெற் றார்.
இராணுவ ஜெனரல்கள் இப்ராஹிமும், முராதும் எகிப்தின் சினாய் தீபகற்பத்திற்கு தப்பி
ஓடினார்கள். போனபார்ட் கெய்ரோ வைக் கைப்பற்றினார். அங்கிருந்து நைல் நதியின்
பகுதிகளைக் கட்டுப்படுத்த எண்ணினார். ஆனால், தொடர்ந்து மம்லுக்குகள் பிதூ யின்
பழங்குடியினரின் உதவியுடன் எதிர்த்து வந்தார்கள். 1799 ல் போனபார்ட்
மாஸிடோனியாவைச் சேர்ந்த மெஹ்மெத் அலி என்ற ஓட்டோமான் அதிகாரியிடம் எகிப்தை
மம்லுக்குகளிடமிருந்து முற் றுலும் கைப்பற்றக் கூறிவிட்டு பிரான்சுக்கு திரும்பிச்
சென்றார்.
பேரரசில் முதல்
தபால் நிலையம் 1840 ல் துவங்கப் பட்டது. 1876 ல் முதல் சர்வதேச தபால் பட்டுவாடா
செய்யப்பட்டது. 1901 ல் முதல் பணபட்டுவாடா தபால்நிலையம் மூலம் செய்யப்பட்டது.
ஓட்டோமான் பேரரசின்
பிரதேசங்களைப் பிடிப்பதற்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆர்வமாய் இருந்தன. பிரிட்ட னும்,
ஃப்ரான்சும் ஓட்டோமான் பேரரசுக்கு ரஷ்யாவை எதிர்ப்பதற்கு ஆதரவு அளித்தன.
கருங்கடலின் கட்டுப்பாட்டைப்பிடிக்க ரஷ்யா வின் க்ரிமியன் தீபகற்பத்தில் போர்நடந்தது.
அதல்லாமல் பல சிறிய தாக்குதல்கள் மேற்கு அனடோலியா, காகசஸ், பால்டிக் கடல், பசி ஃபிக்
கடல் மற்றும் வெள்ளை கடல் ஆகிய பகுதிகளில் நடந்தன. இந்த போர்கள் முற்றிலும் நவீன
முறையில் நடந்தன. அதாவது முதல் முறையாக போரில் இரயில்வே துறை மற்றும் தபால் துறை கள்
பயன்படுத்தப்பட்டன. 1856 ல் பாரிஸ்
உடன்படிக்கை ஏற்படுத்த ப்பட்டபின் பால்கன் தீபகற்பம் மற்றும் கருங்கடல் பகுதிகள் ஓட்
டோமான்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. க்ரிமியன் போரி னால், க்ரிமியன் டடார்
பிரிவினர் 300,000 மக்கள்தொகையில் 200,000 பேர் டாரைட் மாகாணத்திலிருந்து ஓட்டோமான்
பேரரசின் பகுதிக்கு அகதி களாக ஓடினார்கள். அதேபோல் காகசஸ் போரிலும் 90% சத விகித
சிர்காஸியன் பிரிவு மக்கள் சொந்த இடங்களைவிட்டு ஓட் டோமான் பேரரசின் பகுதிக்கு
குடி யேறினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பால்கன், காகசஸ், க்ரிமியா
மற்றும் க்ரீட் தீவு கள் போன்றவற்றிலிருந்து வந்து குடியேறிய பெரும்பான்மையான
முஸ்லீம் மக்கள் தான் தற்போதைய துருக்கியில் அடிப்படை மாற் றத்தை
உண்டாக்கினார்கள். பொதுவாக இவர்களை “முஹாசிர்” என்று அழைத்தார்கள். 1922 ல் ஓட்டோமான்
ஆட்சி முடிவுறும் போது பாதிக்கும் துருக்கிய மக்கள் ரஷ்யாவிலிருந்து வந்த முஸ் லீம்
அகதிகள் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் க்ரி மியன் டடார்கள்
துருக்கியில் நவீன கல்விக்கு பாடுபட்டார்கள்.
எல்லா தேசங்களிலும் எழுந்த தேசியமய மாக்கல்
எழுச்சி ஓட்டோமான் ஆளும் மாகாணங்களிலும் எழுந்தது. இவர்கள் வளரும் சூழ்நிலைக்கேற்ப
கலாச்சாரம் சார்ந்த தேசியமாக் கல் வேண்டி, மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி (அதாவது
கிறிஸ்தவ) செய்துகொண்டார்கள். எல்லை தாண்டி வந்த இந்த கலாச்சாரத்திற்காக பல
உள்ளூர் அரசியல் கட்சிகள் இருபதாம் நூற் றாண்டின் ஆரம்பம் வரை புரட்சி செய்தன. 1804
ல் செர்பியர்கள் பேர ரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட ஓட்டோமான்கள் பால்கனை விட் டு
வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே சமகாலத்தில் நெப்போலியன் படையெடுப்பும்
நடந்தது. 1817 ல் செர்பிய புரட்சி முடி வுக்கு வர தனியாக ஆட்சி அமைத்து பெயரளவில்
சுஸெரியண்டி ஓட்டோமான் இருந்தது. 1821 ல் ஓட்டோமான் பேரரசிலிருந்து முதல் முறையாக
ஹெல்லெனிக் முழு சுதந்திரம் அடைந்தது.
தான்ஸிமட்களின் மாற்றம் தனூப் மற்றும் செர்பிய
பிரிவினரின் தேசியமாக்கும் எண்ணத்தை தடுக்க வில்லை. அவர்கள் 60 ஆண்டுகளாகவே பாதி
சுதந்திரமாகத்தான் இருந்தார்கள். 1875 ல் மோண்டினிக்ரோ, வல்லாச்சியா, மோல்டாவி யா
மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் பெயரளவில் பேரரசுக்கு கட்டுப் படுவது போன்ற
சுதந்திரத்தை அறிவித்தார்கள். 1877 ல் ரஷ்யா துரு க்கிப்போரின் போது ஓட்டோமான்
பேரரசு மேற்சொன்ன பிரதேசங் களுக்கும்,
பல்கேரியாவுக்கும் சுதந்திரம் அறிவித்தது. பல்கேரியா போரின் போது தேசிய புரட்சிக்
குழுவுக்கு ஆதரவாக இருந்தது. 1878 ல் பெர்லின் காங்கிரசின் பெரியதலைவர்
அதிகாரமிக்க ஐரோப் பியாவையும் ஓட்டோமான் பேரரசையும் சந்தித்தார். வெற்றி பெற் றிருந்த
ரஷ்யாவையும் ஆர்தொடக்ஸ் கிறிஸ்தவர்களையும் பால் கனில் நிலையான ஒரு அரசை நிறுவ
அவசரப்படுத்தினார். ஜெர்ம னியின் அதிபர் ஓட்டோ வான் பிஸ்மார்க், எதிர்காலத்தில்
பெரிய போர் ஏற்படாமலும், அதேநேரத்தில் ஓட்டோமான் அதிகாரத்தைக் குறைத்து,
மற்றவர்களின் அதிகாரம் அதிகம் இருப்பதுபோல் பல்கே ரியாவை அமைத்தார். ஓட்டோமான்
பேரரசுக்குள்ளேயே பல்கேரியா ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்
நிலப்பரப்பு முழுமையாக கொடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்கேரியா
ருமேலியா பகுதியை இழந்தது. ருமேலியாவை ஓட்டோ மான் பேரரசு தனி நிர்வாகம் அமைத்து
பார்த்துக்கொண்டது. அதே போல் மாசிடோனியாவுக்கும் தனி நிர்வாகம் அமைப்பதாகக் கூறி யது.
ருமேனியாவும் சுதந்திரம் அடைந்தது. ஆனால், பெஸ்ஸராபி யா என்ற பகுதி ரஷ்யாவிடம்
சேர்ந்தது. செர்பியாவும், மோண்டினிக் ரோவும் குறைவான பகுதிகளுடன் முழுச்
சுதந்திரம் பெற்றன.
1878 ல்
ஆஸ்ட்ரியாவும், ஹங்கேரியும் தாமதம் காட்டாமல் ஓட்டோமான் மாகாணங்களான போஸ்னியா ஹெர்ஸிகோவினா
மற்றும் நோவிபஸர் பகுதிகளை ஆக்கிரமித்தன. ஓட்டோமான் பேரரசு அதைத் தடுத்து தனது
படைகளை நிறுத்திக் கண்காணித்தது. ஆஸ்ட்ரியாவும், ஓட்டோமானும் ஏறக்குறைய 30
ஆண்டுகள் 1908 வரை அந்த மாகாணங்களில் படைகளை நிறுத்தி இருந்தன. ஆஸ்ட்ரியா
ஓட்டோமான் பேரரசில் அரசியல் அதிகாரம் பெற்றபோது, இளம் துருக்கி புரட்சிப்படையுடன் போஸ்னியாஹெர்
ஸி கோவினா சேர்ந்து கொண்டது. ஓட்டோமானுடன் போரைத் தவி ர்க்க உடன் நோவிபஸரிலிருந்து
இராணுவத்தை பின் வாங்கிக் கொண்டது. 1878 ல் பெர்லின் தலையீடு ஓட்டோமானில் இருக்கும்
போது, பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி சைப்ரஸ் நிர்வாகத் திற்காக ஓட்டோமானை
ஆதரித்தார். அதேபோல் 1882 ல் ஓட்டோ மான் பேரரசு முதல் உலகப்போரில் மத்திய சக்தியை
ஆதரிக்க விரு ப்பம் தெரிவித்திருந்ததால் எகிப்தில் ஏற்பட்ட ‘உராபி’ கலவரத்திற் கும்
பிரிட்டன் படைகளை அனுப்பி உதவியது. 1881 ல் பிரான்சு தன் பங்குக்கு துனிஷியாவை
அபகரித்துக்கொண்டது.
இந்த
சுதந்திரமயமாக்கப்பட்ட மாகாணங்களின் விவகாரம் ஆரம்பத்தில் பெரிய சாதனையாகவும்,
அமைதிக்கும், நிர ந்தர ஆட்சிக்கும் வழி ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால்,
பங்கு பெற்றவர்களின் அதிருப்தி 1914 ல் உலகப்போரில் எதிரொலித் தது. செர்பியா,
பல்கேரியா மற்றும் க்ரீஸ் பயன்பெற்றிருந்தாலும், அவர்கள் ஏமாற்றப்பட்டதாக
உணர்ந்தார்கள். அப்போதைய ஓட்டோ மானின் பேரரசர் ‘ஐரோப்பாவின் நோயாளி’ (SICK
MAN OF THE EUROPE) என்று வருணிக்கப்பட்டு, அமைதியற்ற உள்நாட்டு நிலவரம்,
கடும் தாக்குதல்கள், பலவீனமான அரசு என்று ஆகிப்போனார். ஆஸ்ட்ரி யா-ஹங்கேரி மற்றும்
ரஷ்யாவுக்கும் இடையே இருந்த நீண்டநாள் பகை பால்கனின் தேசியமயமாக்கலுக்கு தடையாகவே
இருந்தது. பெர்லின் காங்கிரஸ்
இஸ்தான்புல்லை ஓட்டோமான் பேரரசில் இணப்பதில் வெற்றிகண்டது. பெர்லின் காங்கிரஸ்
இதற்கு முன் பல்கேரியா உடன்படிக்கை மூலம் சுதந்திரம் பெற்றிருந்த பகுதி களை
ஓட்டோமான் பேரரசிடமே, குறிப்பாக மாசிடோனியாவை திரும்ப ஒப்படைத்தது. இதற்கு பலமான
எதிர்ப்பு கிளம்பி முதல் பால்கன் போர் நடந்தது. இதில் ஓட்டோமான்கள் தோல்வி அடை ந்து
பெரும்பாலான ஐரோப்பிய பிரதேசங்களை இழந்தார்கள்.
இதனால், ஓட்டோமான்
பேரரசு நிலப்பரப்பு, இராணுவம், வளமை ஆகியவற்றில் சுருங்கியது. அதிகமான பால் கன்
முஸ்லீம் கள் சுருங்கிப்போன ஓட்டோமான் பகுதிகளிலும், அனடோலியாவின் முக்கிய
பகுதிகளையும் நோக்கி குடிபெயர்ந் தனர். ஓட்டோமான் பேரரசில் முஸ்லீம்கள் க்ரீமியா,
பால்கன், காக சஸ், தென் ரஷ்யா மற்றும் ருமேனியாவின் சில பகுதிகளில் அதிக மாக
இருந்தனர். இதில் பலவற்றை பத்தொன்பது, இருபதாம் நூற்றா ண்டுகளில் ஓட்டோமான்
இழந்திருந்தது. அனடோலியாவும், கிழக்கு த்ரேசும் மட்டும் முஸ்லீம் பிரதேசமாக
இருந்தது. 1880 எகிப்தில் அர சியல் குழப்பம் ஏற்பட்டது. 1882 ல் பிரிட்டன்,
பிரான்சு போர்க்கப்பல் கள் அலெக்ஸான்ட்ரியா துறை முகத்தின் அருகில் இருந்து
‘கேதிவ்’ என்ற பிரிவினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு ஐரோப்பாவின் எதிர்ப்பாளர்களை
தடுத்துக்கொண்டிருந்தனர். மேலும் எகிப்தைக் ஆக்கிரமித்து சீரமைப்பதாகக் கூறியது.
அர்மேனியர்கள்
தங்களுக்கும் ஒத்துக் கொண்டது போல் சுதந்திரம் அளிக்கவேண்டுமென்று ஐரோப்பிய
நாடுகளுடன் சேர்ந்து அழுத்தம் கொடுத்தன. இதனால், சுல்தான் இரண்டாம் ஹமீத் என்பவர்
கிழக்கு அனடோலியாவில் ஹமீதியா பகுதியில் படை நிறுத்தினார். முறையற்ற குர்து
இனத்தவரைப் படையில் சேர்த்து 1894 லிருந்து 1896 வரை 100,000 லிருந்து 300,000
அர்மேனியன்கள் வரை கொல்லப்பட்டு சரித்திரப்புகழ் பெற்ற ‘ஹமீ திய படுகொலை’ நடத்தப்பட்டது.
அர்மேனிய போராளிகள் இஸ்தான் புல் நகரில் ஓட்டோமான் வங்கியின் தலைமை அலுவலகத்தைச்
சிறைப்பிடித்து ஐரோப்பாவின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால், அவர் களுக்கு எந்த உதவியும்
கிடைக்கவில்லை.
ஓட்டோமான்
பேரரசின் தொடர் பால்கன் போரினால் ஐரோப்பாவும், வட ஆப்பிரிக்காவும் மிகவும்
சிரமப்பட் டன. ஆனாலும் 28 மில்லியன் மக்கள்தொகை பேரரசில் இருந்தது. இவற்றில் 17
மில்லியன் நவீன துருக்கியிலும், 3 மில்லியன் சிரியா, லெபனான் மற்றும்
பாலஸ்தீனத்திலும், 2.5 மில்லியன் ஈராக்கிலும் இருந்தார்கள். இதல்லாமல் இன்னும் 5.5
மில்லியன் மக்கள் பெயர ளவில் ஓட்டோமான் பேரரசினாலான அரபிய தீபகற்பத்தில் இருந் தார்கள்.
சமூக ஆதாயம் பெறவேண்டி ஆஸ்ட்ரியா-ஹங்கேரியுடன் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா
அலுவல் ரீதியாக இணை க்கப்பட்டது. இதனால் பேரரசு ஆஸ்ட்ரியாவுடனான போரைத்தவிர்ப் பதற்கு
நோவிபஸரில் நிறுத்தியிருந்த படைகளை திரும்ப அழைத் துக்கொண்டது. 1911-12 ல்
இத்தாலி-துருக்கிப்போரில் ஓட்டோமான் பேரரசு லிபியாவை இழந்தது. பால்கன் போரில்
பேரரசு கிழக்கு த்ரேஸ் நகரத்தையும், சரித்திரப்புகழ் வாய்ந்த ஓட்டோமானின் அட் ரியநோபிள்
நகரத்தையும் தவிர அனைத்து பால்கன் பகுதிகளையும் இழந்தது. ஓட்டோமான் இராணுவம் பின்
வாங்கிவிட்டதால் ஏறக்கு றைய 400,000 முஸ்லீம் கள் கிரீக், செர்பியா, பல்கேரியா
பகுதிகளில் என்ன நடக்குமோ என்று பயத்தில் உறைந்து போயிருந்தனர். ஜெர்ம னியின்
கட்டுப்பாட்டில் பாக்தாத் ரெயில்வே ஈராக்கில் இரயில் பணி களைச் செய்தது. இந்த பணி
ஏற்கனவே தொடங்கப் பட்டிருந்தாலும், பிரிட்டன் உலகப்போரை முன்னிட்டு இரயில்வே
பணியால் கவலை யுற்றிருந்தது.
கான்ஸ்டாண்டிநோபிள்
ஆக்கிரமிக்கப்பட்ட வுடன் கூடவே துருக்கியில் இஸ்மிர் என்ற நகரமும் ஆக்கிரமிக்கப் பட்டது.
அவர்கள் துருக்கி தேசிய அமைப்பு என்ற ஒன்றைத் தொடங் கி துருக்கி சுதந்திரப்போர்
என்று நடத்தி வெற்றி பெற்றார்கள். முஸ் தஃபா கெமால் பாஷா என்பவர் தலைவராய்
இருந்தார். ஓட்டோ மான்களின் கடைசி சுல்தான் ஆறாம் மெஹ்மெத் வஹ்தெத்தின்
நிராகரிக்கப்பட்டார். சுல்தான் 1922 நவம்பர் 1 ல் ராஜினாமா செய்து விட்டு
துருக்கியை விட்டு வெளியேறினார். துருக்கி தனி நாடாக 1923 ஜூலை 24 ல் சர்வதேச
அளவில் அங்கீகாரம் பெற்றது.
1974 ல் ஓட்டோமான்
பேரரசின் வாரிசு களுக்கு துருக்கி அரசு, நாட்டுப்பிரஜைகளாக அங்கீகாரம் அளித்தது. ஓட்டோமான்
இளவரசர் மெஹ்மெத் அப்துல் காதிரின் மகன் மெஹ் மெத் ஓர்ஹன் 1994 ல் இறந்துபோனார். ஓட்டோமான்
சுல்தான் இர ண்டாம் அப்துல் ஹமீதின் பேரரும், அழிந்துபோன ஓட்டோமான் பேரரசின் மூத்த
உறுப்பினருமான எர்துகுல் ஒஸ்மான் மட்டும் இருந் தார். இவர் துருக்கியின்
பாஸ்போர்டை கூட பெறவிருப்பமில்லாமல் தான் இன்னும் எங்கள் மூதாதையரின் ஓட்டோமான்
பேரரசைச் சேர் ந்தவன் தான் என்று கூறிவந்தார். மீண் டும் ஓட்டோமான்கள் ஆட்சி
வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா என்ற பத்திரிக்கையாளர்க ளின் கேள்விக்கு,
அவர், தேவையில்லை துருக்கி ஜனநாயக முறை யில் நன்றாகவே இருக்கிறது என்றார். 1992 ல்
அவர் முதல் முறை யாக துருக்கி திரும்பி, துருக்கிப் பிரஜையாக வும் ஆகி, துருக்கி
பாஸ்போர்டையும் பெற்றுக்கொண்டார்.
2009 செப்டம்பர் 23 ல்
எர்துகுல் ஒஸ்மான் தனது 97 வது வயதில் இஸ்தான்புல் நகரில் கடைசி சுல்தான் வாரி சாக
இருந்து இறந்து போனார். சுல்தான் அப்துல் மெஸித்தின் இர ண்டாவது மகன் பயேஸித்
ஒஸ்மானின் இளைய பேரர் யாவுஸ் செலிம் ஓஸ்கூர் என்பவர் சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்தவராக
(அதாவது பட்டத்திற்கு உரியவர் அல்ல) இன்னும்
ஆஸ்திரேலியா வின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக