அமைதியாக இருக்கும்
அருகாமை மக்களைக் கொள்ளையடித்து, தங்கள் உணவை தேடிக்கொண்டிருந்த பழங்குடி யினர்
மீது போர் தொடுத்து ஸ்காண்டிநேவியன்கள் கைப்பற்றிய பூமி. மங்கோலியப் பீடபூமி. இதை
ஸ்காண்டிநேவியன்கள் கடற்கொ ள்ளைக்கும், அடிமை வாணிபத்திற்கும் பயன்படுத்தி
வந்தார்கள் அது தனி கதை. இந்த மங்கோலியா தான் துருக்கிகளுக்கும், மங் கோலியர்களும்
உண்மையான தாய் பிரதேசம். ஆண்டாண்டாக பழங்குடி யினராக இங்கு வாழ்ந்த இந்த இரு
சமூகமும் உலக சரித்திரத்தில் மகத்தான இடம் பிடித்தனர். இவர்களின் மொழி ஏறக்குறைய
ஒன்றாகவே இருக்கும். ஆளுய ரத்திற்கு வளர்ந்திருக் கும் காட்டுப்புல், கரடுமுரடான
மலைகள் எல்லாம் தாண்டி அமை ந்த பிரதேசம். இவைகளைக் கடந்தால் நேராக கொண்டு போய்
ஐரோப்பாவில் விடும். குதிரைகளில் பயணித்தால் விரைவில் எட்ட லாம். தென் பகுதியில்
உயர்குடி வகுப்பினர் வசித்து வந்தார்கள். அமெரிக்க இந்தியர்கள், சைபீரிய பழங் குடியினர்கள்
மற்றும் வட க்கு மங்கோலியர்கள் அனைவரும் ஒரே வழிமுறையில் வந்தவர் கள் என்று
இறுதியான மனித ஆய்வு சமீபத்தில் தெரிவிக்கிறது.
இந்த
மங்கோலிய பீடபூமியைப் பற்றி கொஞ்சம் ஆதியிலிருந்து பார்ப்போம். காட்டுமிராண்டி
கூட்ட ங்களாய் 100 ஆம் ஆண்டுகளில் பல பிரிவு மக்கள் சேர்ந்த இனம் மங்கோலிய இனம்.
பின்னாளில் ஸோன்ங்க்யூ, ஸியான்பி, ரூரன், கூக்துர்க் அல்லது ஹூன் மாகாணம் என்று
அடையாளம் காணப் பட்டது. இன்றும் சரித்திர ஆசிரியர்கள் இவர்கள் மங்கோலிய பழங் குடியி
னரா அல்லது துருக்கி பழங்குடியினரா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார் கள். இந்த
ஹூன் மாகாணம் மத்திய ஆசியா வில் “ஷன்யூ” என்ற பேரரசாக மாறி யது. ஷன்யூ மோடுன் என்பவர்
இதை விரிவுபடுத்தினார். ஷன்யூ பேரரசு சீனா வின் ஹான் பேரரசு டன் போட்டியிட்டது.
ஷன்யூவின் பிரமாண்ட படை முன்னால் தாக் குபிடிக்க முடியாமல் ஹான் பேரரசின் சீனா
மன்னர் ஷன்யூவை தனிப்பேரர சாக ஒத்துக்கொண்டார். ஷன்யூவுடன் திருமண உறவு களை
வளர்த்துக்கொண்டு ஆண்டு கப்பம் செலுத்தவும் ஒப்புக்கொ ண்டார். மோடுன் ஆட்சியில்
ஷன்யூ பேர ரசு நிர்வாகத்திறமையி லும், இராணுவத்திலும் பலமாகஇருந்து “ஷாமானிஸம்”
என்ற மதக்கொள்கையை கடைபிடித்து வந்தது. (இங்கு நிறைய
குறிப் பிடவரலாறு உள்ளது. தேவையில்லை என்ற காரணம் கருதி தவிர்த்துவிடுகிறேன்.)
நாளடை வில் சரித்திரம் ஸியன்பிஸ்கள் என்பவர்கள் தான் மங்கோலியர்கள் என்று முடிவு க்கு
வந்தது. 2006 ல் நடந்த அகழ் ஆராய்ச்சியில் மங்கோலியாவின் அல்டாய் மலைப் பகுதியில்
2,500 ஆண்டு கள் பழமைவாய்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஸைத்திய போர்வீரன் உடல் கண்டு
பிடிக்கப்பட்டது. மங்கோலியர் களின் புராதனம் கொய்ட் செங்கெரீன் அகூய் பகுதியில் வட
நீலவ ண்ண குகை ஓவியங்கள், பயன் கோங்கார் பகுதியில் ஸகான் அகூய் வெள்ளை குகை
ஓவியங்கள் மூலமும் கண்டறியப்பட்டுள் ளன. ஸியன்பிஸ்களின் இளம்தலைவர் தன்ஷி ஹுயூ
சிறு நாடோடிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஹூன் மற்றும் சீன அரசு டன் அவ்வப் போது
மோதிக்கொண்டிருந்தார்.
ஒரு வழியாக
ஸியான்பி மாகாணத்தை உருவாக்கினார். அதுவும் சிறிது நாளில் சிதறுண்டு போனது. பல
சிறு அரசர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதிக்கொண்டார்கள். ஸியான்பி மாகாணம் தன் தலை
மையை ‘கான்’ என்று அழைத்தது. இவர்கள் துருக்கி நாடோடிகளாகவும் அறியப் பட்டனர்.
ஆனால், நவீ ன துருக்கிகள் இதிலிருந்து மரபு ரீதியாகவும், பூகோள ரீதியாகவும்
மாறுபட்டவர்கள். சரித்திரத்தில் முதல் கானாக காபுல்கான் என்ற வர் கியாத்
பழங்குடியினரிலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறார். காபுல்கானின் மகன்
ஹோடுலாகான் எதிரிக்கூட்டத்தலைவனான அம்பகைகானுடன் பலமுறை போரி ட்டார். ஹோடுலாகான்
இறந்த வுடன் கூட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க திணறினார்கள். இறு தியில்
காபுல்கானின் பேரர் ஒருவரான யெஸுகெய் பகாதூர் என்ப வரை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
மங்கோலியாவின்
கிழக்கில் அல்டாய் மலைப் பகுதி. அந்த தாய் தகப்பனில்லாத தன் குழந்தைகளுக்கு
உணவளிக்க மிகவும் சிரமப்பட்டாள். சில சமயம் காட்டுத் தாவரங்க ளையும், சிறிய
மிருகங்களையும், சுண்டெலிகளையும், அவர்கள் கூட்டத்துக்குள்ளேயே திருடியும்
உணவளித்து வந்தாள். அவர்களின் சிறிய கூட்டத்தின் தலைவராக இருந்த அந்த குழந்தையின்
தந்தை யை அந்தக் கூட்டத்தார்கள் தலைமைப் போட்டியில் விஷம் வைத் துக் கொன்றுவிட்டார்கள்.
அவர் தான் யெசுகெய் பகாதூர். ஆறு குழ ந்தைகளின் தந்தை ஆவார். அந்த குழந்தைகளில்
ஒரு சிறுவனுக்கு தந்தை இறந்தபோது எட்டு வயது. அந்த சிறுவனின் பெயர் தெமு ஜின். வழக்கமாக
தந்தைக்குப் பின் தலைமைக்கு வர வேண்டிய தெமுஜின்னை அவர்களின் கூட்டத்திலேயே யாரும்
ஒப்புக்கொள்ள வில்லை. அதனால் ஒருகுழு சேர்த்து முரண்டுபிடித்த அந்த சிறுவன் தெமுஜின்னை
மரக்கூண்டுக்குள் பலநாட்களாக சிறைவைத்தனர். ஒருநாள் இரவில் தெமுஜின் தப்பித்து தன்
தாய் தம்பிகளுடன் வெளியேறி நீண்ட தூரம் பயணித்து வேறு ஒரு நாடோடிக்குழுவு டன்
சேர்ந்து கொண்டார். தன் தந்தையின் சகோதரர் தூரில் கானு டனும், தனது இன்னொரு
சகோதரர் ஜமுகாவுடனும் சேர்ந்து சிறிய கூட்டங்களை வெற்றி கொண்டார். அந்த
கூட்டங்களில் ஒன்றான மெர்ஜித்பழங்குடியினர் தெமுஜினின் வீட்டைஅழித்து அவர் மனைவி
பூர்டேயை சிறைப்பிடித்துச் சென்றனர். இது ஏற்கனவே முன்பு தெமு ஜினின் தந்தை
யெஷுகெய் மெர்ஜித் தலைவனின் மனைவி ஹூலு னை சிறைப்பிடித்து சென்றதற்கு
பழிவாங்குவதாக இருந்தது. தந் தையால் சிறைபிடித்து வரப்பட்ட ஹூலுன் தான் தெமுஜின்
தாயார். மனைவியை மீட்க மெர்ஜித் கூட்டத்தின் மீது தெமுஜின் படையெடு த்து வென்றார்.
இந்த சிறுவன் தெமுஜினின் கதை உலகின் அனை த்து மொழிகளிலும் சினிமாப்படமாக
எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனா ல், இவரின் கதை என்று சொல்லப்படுவதில்லை. அந்த
சிறுவன் தந்தையைக் கொன்ற தன் கூட்டத்துக்குள்ளேயே அதிகாரத்திற்கு வர இருபத்தைந்து
ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. தனது நாற்பதாவது வயதில் தங்கள் பழங்குடியின
குழுவுக்குத் தலைவ னாகி, இன்றளவும் உலகம் வியக்கும் “ஜெங்கிஸ்கான்’ என்று பெயர்
பெற்றார். ஜெங்கிஷ் என்றால் ‘எல்லோரும் சூழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்’ என்று
பொருள். இவர் தனி மனித இராணுவம் என்று புக ழப்பட்டார்.
சரித்திரத்தில்
எவருடைய ஆரம்பமும், முடிவும் ஜெங்கிஸ்கானுடையது போல் அல்ல. இவர் தோராயமாக 1167 ல்
பிறந்தார். இவர் தங்களுடைய மூதாதையர்கள் போல் அதே இடத்தில் பிறந்தோம் வளர்ந்தோம்
மரணித்தோம் என்றுவாழ விரு ம்பவில்லை. வேற்றுமனிதர் அறியா மலைகளுக்கு பின் வாழ்ந்து
கொண்டிருக்கும் தமது கூட்டம் உலகம் அறியப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன்
நாடோடி கூட்டமக்களை தன் தலைமையின் கீழ் திரட்டி இரத்தம் இரத்தமாக போகுமிடமெல்லாம்
சிதறடித்து முன்னேறினார். மங்கோலிய இனத்தில் குழந்தைப் பருவத்திலேயே மலையேறுவது,
குதிரை விளையாட்டு போன்றவை கட்டாயமாகிப் போனது. பயம் என்றால் என்ன என்றே அறியாத
ஒரு கூட்டம். கம் யூனிஸ சீனா மங்கோலிய சரித்திரத்தை காட்டுமிராண்டிகள் என்று
வருணிக்கின்றன. இரத்தத்தாலேயே பசிபிக்கடலின் வழியைத் திற ந்து ஐரோப்பாவில்
நுழைந்தார். முதல்முதலில் ஸி ஸியா என்ற வட சீனப் பகுதியைக் கைப்பற்றினார். பின்
சக்திவாய்ந்த கின் பேர ரசைத் தாக்கினார். 1209 ல் வடக்கில் சீனா நோக்கி நகர்ந்து
1215 ல் பெய்ஜிங்க் நகரத்தைப் கைப்பற்றினார். 1219 ல் இவரின் வாழ்வின் அதிமுக்கிய
திட்டமாகிய மேற்கை நோக்கி நகர்ந்தார். க்வாரஸெம் என்ற மாகாணத்தின் துருக்கி
ஆட்சியாளர் இரண்டாம் முஹமது ஷா என்பவரை சரனடையச் சொல்லி தூது அனுப்பினார். சாதாரண
பழங்குடிப் படை யினர் மன்னரை சரணடையச் சொல்வதா? முஹ மது ஷாவின் ஆட்கள் வந்த
தூதுவரைக் கொன்று, மீதி ஆட்களை தலை மழித்து அவமானப்படுத்தி அனுப் பினர்.
வெகுண்டெழுந்த ஜெங்கிஸ்கான் போரில் குதித்தார். பலமான கடுமையான எதிர்ப் புக்குப்
பிறகு, ஜெங்கிஸ்கான் வெற்றிபெற்றார். 1220 ல் சமர்கண்ட் மற்றும் புகாரா நகரங்களை
கைப்பற்றினார். முஹமது ஷா கஸ்பி யன் கடலின் ஏதோ ஒரு தீவில் மறைந்து இறந்து போனார்.
முஹ மது ஷாவின் இராணுவத்திலிருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான குதிரைப்படை
வீரர்கள் மங்கோலியப் படையில் சேர்ந்தனர். அங்கி ருந்து தெற்காக திசைதிரும்பி
இந்தியாவை நோக்கி வந்தார். ஆனா ல், இந்துஸ் ஆறுவரை வந்தவர் அறியப்படாத காரணத்தால்
திரும் பி விட்டார். பின்னர் 1223 ல் கஸ்பியன் கடல் மற்றும் காகசஸ் மலைகளின்
வாயிலாக படைகளுடன் பயணித்து க்ரீமியா மற்றும் தென் ரஷ்யா பகுதிகளில்
கொள்ளையடித்தார். அலெக்ஸாண்டரின் மனோதத்துவ ரீதியான போருக்கு முன்வரை
ஜெங்கிஸ்கானின் வேகத்திற்கும், வெற்றிக்கும் இணையான வீரர் எவரும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக