1259 ல் ஹுலகுவால்
அலிப்போ மற்றும் டமாஸ்கஸ் நகரம் கைப்பற்றப்பட்டது. இதனால் தென்கடற்கரைப் பகுதியில்
எகிப்தின் வழி அவர்களுக்கு திறக்கப்பட்டது. 1260 ல் எகிப் தின் மம்லுக் சுல்தானின்
ஜெனரல் ஒரு வரால் பைபர்களால் நாஸ ரெத் நகரத்திற்கருகில் அய்ன் ஜாலூத் என்ற
இடத்தில் எதிர்கொள்ள ப்பட்டது. மிகக் கடுமையான உலகப்போர்களில் ஒன்றான இதில்
பைபர்கள் மங்கோலியர்களை வென்றார்கள். மங்கோலியர்கள் அய்ன் ஜாலூத் தில் மம்லூக்
என்னும் சாதாரண அடிமைப்படைக ளிடம் தோற்றார்கள். பைபர் என்னும் எகிப்தின் இராணுவக்
கமாண் டரை சில ஆண்டுகளுக்கு முன் தான் மங்கோலியர்கள் கைது செய்து அடிமைச்
சந்தையில் விற்றிருந்தார்கள். அவர் தன் திறமை யால் எகிப்து இராணுவத்தில்
உயர்பதவியில் இருந்து இன்று அதே மங்கோலியர்களை எதிர்த்தார். 50 ஆண்டுகளான
போர்களில் முதல் முறையாக ஜெங்கிஸ்கானின் வம்சம் தோல்வியுற்றது. அய்ன் ஜாலூத்
தோல்வி மங்கோலி யர்களின் அதிகாரத்தை மேலும் வளரவிடாமல் தடுத்தது. பாலஸ்தீனமும்,
சிரியாவும் எகிப்தின் மம் லூக்குகளின் பேரரசுடனே இருக்கவும், மெஸோபோ டாமியாவும்,
பெர்ஷியாவும் மங்கோலிய பேரரசுடன் இருந்தது.
அய்ன் ஜாலூத் தோல்விக்குப்
பிறகு, ஹுலகுவும், அவர் சந்ததியினரும் கருங்கடலின் கிழக்கே வாணிபவழியான தப் ரிஸ்
என்ற இடத்தை தலைநகராக்கிக் கொண்டார்கள். ஹுலகு மம் லூக்குகளிடமிருந்து
சிரியாவையும், பாலஸ்தீனத்தையும் கைப்பற்ற எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால்,
பேரரசின் மேற்கு எல்லை யாக யூப்ரடிஸ் நதிக்கு மேல் முன்னேற முடிய வில்லை. கிழக்கில்
இந்துஸும், அமுதர்யாவிலிருந்து கீழ் வடக்கில் இந்தியப் பெருங்க டல் வரை கான்களின்
பேரரசு இருந்தது. ஹுலகுகான் 1335 ல் மரண மடைந்தார். பெர்ஷியாவில் சிறிய
ஆட்சியாளர்களின் வெற்றியா லும், மத்திய ஆசியாவின் மலைப்பகுதியிலிருந்து கிளம்பிய
இன் னொரு கூட்டத்தினரின் வருகையாலும், ஜெங்கிஸ்கான் என்னும் தனிமனிதனின் சந்ததி
முடிவுக்கு வந்தது. சீனாவிலும் 1368 ல் யூவன் பேரரசு முடிவுக்குவந்து மிங்க் ஆட்சி
துவங் கியது. 1383 ல் தைமூரி யர்கள் வடக்கு பெர்ஷியாவில் நுழைந்தனர். ரஷ்யாவிலும்
அடுத்த கால்நூற்றாண்டுகளில் தங்க நாடோடிகளின் ஆட்சி சரிவை நோக்கி நகர் ந்தது. 1380
ல் மாஸ்கோவின் இளவரசர் குலிகோவோ என்ற இடத்தில் தோற்கடி த்தனர். 1395 ல்
தைமூரியர்கள் சராய் பெர்கே நகரை அழித்தனர். ரஷ்ய சரித்தி ரத்தில் டடார்கள் என
மங்கோலி யர்கள் அழைக்கப்பட்டனர். ரஷ்யாவின் அதிகார த்தில் போட்டியிட்ட ஒரே இனம்
மங்கோலிய இனம் மட்டுமே. மங்கோலியாவின் உலா ன்பாடர் நகரில் உள்ள ஜெங்கிஸ்கானின் குதிரையில்
வீற்றிருப்பது போன்ற சிலை மிகவும் உயரமானது. கீழிருந்து இயந்திரத்தில் (லிப்ட்)
சென்று பின்பு கழுத்துப் பகுதியிலிருந்து ஏணியில் செல்ல வேண்டும்.
சரித்திரத்தில்
மிக குறுகிய காலத்தில் பிரமாண்ட வெற்றிபெற்று வெகு விரைவில் அதிகாரம் இழந்தது
மங்கோலியர்கள் தான். மங்கோலியர்களின் வெற்றி இணையற்ற திறமையால் பெற்றது. ஜெங்கிஸ்
கானின் கல்வியறிவில்லாத கால த்திலிருந்து வந்த இவர்கள் பின்னாளில்
துருக்கியர்களின் எழுத்தை பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பழக்கப்படுத்திக்
கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட மதமும் ஷாமானிஸம் (ஷாமானிஸக்
கொள்கை யானது இயற்கையை வணங்குவதாகும்) என்ற கொள் கையைக் கொண்டது. மங்கோலியர்களின்
வீழ்ச்சிக்கு முக்கிய கார ணமாகக் கருதுவது அவர்கள் ஒரு தொடர்ச்சியாக இல்லாமல் க்ரே
ட் கானால் மூன்று பகுதிகளுக்கு திசை மாறி வெற்றி கொண்டதே என்பதாகும். சீனாவில்
அவர்கள் திபெத்துடன் பலமான உறவு வைத் திருந்த காரணத்தால் புத்தமதத்தைச்
சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்குஆசியாவில் அவர்கள் வெற்றிகொண்ட
பகுதிகள் முஸ்லீம் கலீஃபாக்கள், லத்தீன் ஜெருசலம் மற்றும் பைஸாந்திய பேரரசின்
எல்லைகளை ஒட்டி இருந்ததால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவமதத்தை சார்ந்திருக்க
வேண்டியதாகி இருந்தது. 1255 ல் பெர்கே தான் முதலில் இஸ்லாத்தைத் தழுவினார். அடுத்த
மூன்று ஆண்டுகளில் 1258 ல் ஹுலகு (இவர் மனைவி
நெஸ்டோரியன் கிறி ஸ்தவர்) பாக்தாதை அழித்து (இஸ்லாமிய
உலகுக்கு இன்றுவரை ஈடு செய்யவே முடியாத ஒரு இழப்பு) இஸ்லாமிய கலீஃபாவைக்
கொன்றார்.
இந்துகுஷ்
மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில்
ஜெங்கி ஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டு வந்தனர். நாளடைவில்
அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார்கள். சிறு
ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே
அழைத்தார்கள்.
குப்ளாய்கான்
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு, சீனாவில் மிங்க் பேரரசு ஆட்சி செய்து வந்தது.
யூவான் பேர ரசு சீனாவில் தூக்கி எறியப்பட்ட பிறகு, குப்ளாய்கான் மிங்க் பேரர சுடன்
போரிட்டார். 1380 ல் மிங்க் இராணுவம் மங்கோலியர்களின் கரகோரம் நகரை
சேதப்படுத்தியது. ஆனால், மங்கோலியர்கள் விடா மல் தங்களின் பிறப்பிலேயே அமைந்த
புராதன தாக்குதல் முறை யில் தொடர்ந்து சீனாவின் எல்லைகளை தாக்கிக் கொண்டிருந்தார் கள்.
குப்ளாய்கான் சீன பாரம்பரியத்திலான அரண்மனையிலேயே தங்கி இருப்பதை விரும்பினார்.
இதனூடே சீனாவில் திபெத்தியர்க ளுடனும், மன்சூஸ்களுடனும் மங்கோலியர்கள் நல்ல உறவைப்
பேணி வந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் தலாய்லாமாவு டன் இருந்த நெருக்கமான
உறவால் மங்கோலிய பழங்குடிகள் புத் தமதத்தை தழுவினார்கள். குப்ளாய்கான்
ஜெங்கிஸ்கான் பரம்பரை யிலேயே சற்று வித்தியாசமாக இருந்தார். கலைரசிகராகவும், நிர் வாகத்
திறமை வாய்ந்தவராகவும் இருந்தார். நிறைய சீன கலாச் சாரமுள்ள கட்டிடங்களை
நிர்மாணித்தார். சீன நாட்காட்டியை பய ன்படுத்தினார். மத்திய கிழக்கு முஸ்லீம்
மருத்துவர்களை வரவ ழைத்து மருத்துவமனைகளைக் கட்டினார். 36 பகுதி இஸ்லாமிய
மருத்துவபுத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்க வைத்தார். முஸ் லீம், கிறிஸ்தவ,
சீன, லத்தீன் போன்ற பல மத தலைவர்களை அரண்மனைக்கு வரவழைத்தார்.
90 ஆண்டுகால மங்கோலிய சீன ஆட்சியில் பல
நன்மைகள் விளைந்தாலும், நாட்டுக்குள்ளேயே உள்நாட்டு குழ ப்பங்கள் தலை தூக்க
ஆரம்பித்தன. புத்த மதக்கோட்பாடு இரத்தம் சிந்துவதற்கு எதிராக இருந்த தால் மங் கோலியர்களுக்கு
போரிடு வதில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது. இராணுவத்திலும் முறை கேடுகள் நடந்தன.
ஜப்பான், வியட்நாம் மற்றும் ஜாவா தீவுகளுக்கு அனுப்பப்பட்ட மங்கோலிய இராணுவம்
தோல்விகண்டு திரும்பின. குப்ளாய்கானின் மனைவி சாபியின் மரணமும், அடுத்த ஐந்தாம்
ஆண்டில் அவர் மகன் மரணமும் அவரை நிலைகுலைய செய்தன. தன் ராஜகம்பீரமான வாழ்க்கை
தரத்தை வெறுக்க ஆரம்பித்தார். நாட்டில் ஊழல் தலை தூக்க ஆரம்பித்தது. நாட் டின்
நடைமுறை செலவுகளுக்கு வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயமாகியது. மக்களிடையே கலவரம்
ஏற்பட்டது. சமாளிக்க முடியாமல் மங்கோ லிய குடும்பங்கள் மத்திய ஆசியாவை நோக்கி
சென்றன. நாட்டில் அமைதி ஏற்படவேண்டி மக்களிடையே மிகவும் பிரபலமான குடும் பத்தைச்
சேர்ந்த ஜு யூவான்ஸ்ங்க் என்பவர் தலைமையேற்று மிங்க் பேரரசை நிறுவி மூன்று
நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டார்.
பதினாறாம்
நூற்றாண்டில் மங்கோலியர் களின் கிழக்குப்பகுதி மன்சூஸ்கள் சற்று பலம் பெற்றார்கள்.
இத னால் அந்த பகுதி மங்கோலியர்கள் மன்சூஸ்களின் பிரதேச மக்க ளாகிப் போனார்கள்.
அவர்கள் இரு பிரிவுகளுக்குள்ளும் திருமண உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு நட்பாகிப்
போயினர். 1644 ல் மன்சூஸ்கள் மிங்க் பேரரசை எதிர்த்து போரிட்டு கிங்க் பேரரசு என்ற
ஒன்றை புதியதாக உருவாக்கினார்கள். அந்த பகுதி மங்கோலிய மக் கள் சீனாவாசிகளாகவே
ஆகிப்போனார்கள். 1691 வரை வெகு தொலைவில் இருந்த சில மங்கோலியர்கள் மட்டும் சீனப்
பேரரசி லேயே வெளி மங்கோலியர்களாய் இருந்தார்கள். பதினேழாம் நூற் றாண்டுகளில்
மன்சூஸ் பேரரசுடன் இருந்த மங்கோலியர்கள் 1912 ல் மன்சூஸ் பேரரசு வீழ்ந்து சீனா
விடுதலை (ரிபப்ளிக் ஆஃப் சீனா) அடைந்ததில் சீன
மக்கள் ஆகினார்கள்.
சீனாவின்
வெளிப்புறத்தில் இருந்த மங்கோலி யர்கள் சீனாவால் முற்றிலும் கைவிடப்பட்டு
தனியாகிப் போனார் கள். 1912 ல் ரஷ்யாவின் உதவியால் வெளி மங்கோலியர்கள் சீனா, ரஷ்யா
என்ற இரு சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையில் தனியாக செயல்பட்டு வந்தது. இது அவர்களின்
முன்னேற்றத்திற்கு எந்த பல னையும் அளிக்கவில்லை. இறுதியில் 1946 ல் மங்கோலியா
சுதந்திர நாடாக அங்கீகாரம் பெற்றது. (மங்கோலியன்
பீப்பிள்ஸ் ரிபப்ளிக்) சர்வதேச நாடுகளின் ஐக்கிய நாட்டு சபை 1961 ல்
அங்கீகாரம் அளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக