மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஓட்டோமான்கள் வரலாறு 2



ஆரம்பத்தில் ஓட்டோமான் அரசு பலம்பெற சாதாரண அரசாக அமைந்து ‘மில்லத்’ என்னும் சட்டம் மூலம் யார் எந்த மதத்தைச் சார்ந் தவராக இருந்தாலும் அந்த மத கொள்கைக ளையே கடைபிடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தது. உஸ்மா ன் இறந்த பிறகு ஓட்டோமான் ஆட்சி கிழக்கு மெடிட்டரேனியன் மற்றும் பால்கன் வரை பரவியது. ஏற்கனவே புஸ்ரா நகரை இழந்த தால் வடமேற்கு அனடோலியாவின் முழு கட்டுப்பாட்டையும் பைஸாந்திய சாம்ராஜ்ஜியம் இழந்தது. 1387 ல் வெனீஷியர்களிடமி ருந்து முக்கியமான நகரமான தெஸ்சலோனிகியைக் கைப்பற்றியது. 1389 ல் கொஸோவோ நகரைக் கைப்பற்றி செர்பிய அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஐரோப்பிய கண்டத்தில் காலூன்றியது. 1396 ல் பெரிய படையுடன் சென்று நிகோபோலிஸ் என்ற இடத்தில் தோற்றுப்போனதில் ஓட்டோமானின் வளர்ச்சி தடைபட்டது. ஓட்டோ மான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நிலப்பரப்பு கள் பைஸாந்திய பேரரசிடமிருந்து கைப்பற்றியது. 1400 ல் ஓட்டோ மான்களுக்கு பரிசு போல் கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றி கொள்ள ப்பட்டது. ஆனால், மறுபுறம் பூதாகரமாக மத்தியஆசியாவிலிருந்து வந்த பழங்குடியின தைமூர் மன்னன் இந்தியாவிலிருந்து ரஷ்யா வரை வெற்றிகளும், அழிப்புகளும் நடத்தி முன்னேறி வந்து கொண் டிருந்தான். 1402 ல் அவன் ஓட்டோமான் இராணுவத்தை அங்காரா என்ற இடத்தில் நாசப்படுத்தினான். பால்கனிலும், அனடோலியாவி லும் அவனின் ஆக்கிரமிப்பும், கொள்ளைகளும் ஏறக்குறைய பதி னோரு ஆண்டுகள் இருந்தன. சுல்தான் பயேஸித்தை கைது செய்து கூண்டில் அடைத்து அவர் மரணமாகும் வரை வைத்திருந்து தனது வெற்றியின் அடையாளமாகக் காட்டிக்கொண்டான். தைமூரியர்க ளின் எண்ணம் நாட்டைப் பிடிக்க வேண்டும் என்பதல்ல அவர்கள் வந்தார்கள், கொன்றார்கள், கொள்ளையடித்தார்கள் சென்றார்கள். சுல்தான் இறந்துபோன பின்பு பேரரசு அழிந்து போனது. பின்பு அடுத்து வந்த சுல்தான் முதலாம் மெஹ்மெத்தும், அவர் மகன் முராத் மூலம் மெதுவாக தலைதூக்கி ஆசிய மைனர் மற்றும் ஐரோப்பாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். 1402 லிரு ந்து 1403 வரை உள்நாட்டுப்போர் நடந்தது. சுல்தான் முதலாம் மெஹ்மூத் அவர்கள் பதவிக்கு வந்தவுடன் உள்நாட்டுப்போரை அடக்கி சுமூக நிலைக்கு கொண்டு வந்தார்.
                             பால்கன் பகுதியின் சில நகரங்களான தெஸ்சலோனிகி, மாஸிடோனியா மற்றும் கொஸோவா போன்ற வற்றை ஓட்டோமான் பேரரசு 1402 ல் இழந்தது. 1430 லிருந்து 1450 க்குள் இரண்டாம் முராத் என்பவரால் மீண்டும் வெற்றி கொள்ளப் பட்டது. 1444 ல் இரண்டாம் முராத் ஹங்கேரியன், பாலிஷ்கள் மற் றும் போலந்தின் மூன்றாம் வ்லாடிஸ்லாவ் (இவன் ஹங்கேரிக்கும் மன்ன னாய் இருந்தான்) வின் வல்லாச்சியர்கள் ஆகியோரை வென் றார். வர்னாபோர் என்ற போரில் ஜானோஸ் ஹுன்யாதி என்பவ னையும் வென்றார். இந்த ஜானோஸ் ஹுன்யாதி அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து ஹங்கேரியர்கள் மற்றும் வல்லாச்சியர்களுடன் இணைந்து வந்து ஓட்டோமான்களை எதிர்த்தான். இரண்டாம் கொஸோவோ போரில் இரண்டாம் முராதின் மகன் இரண்டாம் மெஹ்மூத் 1448 ல் தோற்கடிக்கப்பட்டான். இருபத்தோரு வயதான வீரமிக்க இரண்டாம் மெஹ்மெத் 1453 மே 29 ல் கான்ஸ்டாண்டிநோ பிளை வென்றார். வெனிஷிய வணிகர்கள் தரை மார்க்கமாக கான் ஸ்டாண்டிநோபிள் செல்லும் வழிகள் ஓட்டோமான்கள் வசம் இருந் ததால், கடல் வழியாக வாணிபம் செய்து வந்தார்கள். இரண்டாம் மெஹ்மெத் கடற்படைகளை அழைத்து கான்ஸ்டாண்டி நோபிள் துறைமுகம் செல்லும் கப்பல்களைத் தடுத்து 50 நாட்கள் தொடர்ந்து போரிட்டார். கான்ஸ்டாண்டிநோபிளை காக்க பைஸாந்தியர்கள் கடுமையாக போரிட்டு தோற்றது சரித்திரப்புகழ் வாய்ந்தது. இந்தப் போரில்தான் முதல் முதலாக வெடிமருந்து பொருட்கள் கையாளப் பட்டன. ஓட்டோமான்களின் ஆட்சியை இரண்டு காலகட்டமாகப் பிரிக்கலாம். ஒன்று 1566 க்கு முன்பு நிலப்பரப்பை விரிவாக்கியது, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம். இன்னொன்று இராணுவம், அரசியலமைப்பு ஆகும்.  
                        இரண்டாம் மெஹ்மூதின் கான்ஸ்டாண்டிநோபி ளின் வெற்றியால் பைஸாந்தியர்களின் சாம்ராஜ்ஜியம் முடிவுற்றது. அதுவரை சுன்னி பிரிவு முஸ்லீம்களின் தலைமை இடமாக இருந்த பாக்தாத் மாற்றப்பட்டு கான்ஸ்டாண்டிநோபிள் (இஸ்தான்புல்) தலை மை இடமானது. மேலும் அந்த வெற்றி தென் கிழக்கு ஐரோப்பா மற் றும் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதிகளில் ஓட்டோமான்களின் நிரந் தர பேரரசுக்கு வித்திட்டது. கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றிக்குப் பிறகு, இரண்டாம் மெஹ்மூத் கிறிஸ்தவ போதகர் ஜென்னடியோசை சந்தித்து ஆர்தடக்ஸ் தேவாலயம் கட்டிக்கொள்ளவும் மத விஷயங் களில் சுயமாக செயல்படவும் ஒப்புதல் அளிப்பதாகவும், தங்கள் ஓட் டோமான் ஆட்சியை ஏற்றுக் கொள்ளுமாறும் கூறினார். பைஸாந்தி யர்களாலும், மேற்கு ஐரோப்பியர்களாலும் (கிறிஸ்தவர்கள்) தரமற்று நடத்தப்பட்டதாலும், பெரும்பான்மையோர் ஆர்தடக்ஸ் கிறிஸ்தவர் களாக இருந்ததாலும், லூகஸ் நோடரஸ் என்பவர் ‘ரோம கிறிஸ்தவ தலைவர்களின் தொப்பிக்கு பதில் சுல்தான்களின் தலைப்பாகை எவ் வளவோ தேவலாம்’ என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டு ஆத ரவு தெரிவித்தார்.
                             இரண்டாம் மெஹ்மூத் கான்ஸ்டாண்டிநோ பிளை 1453 ல் ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாக்கினார். சுல் தான் ‘கெய்செர் இ ரூம்’ என்று (அதாவது ரோமின் சீஸர் போல்) புகழப்பட்டார். இந்த புகழ்ச்சியின் காரணமாக இரண்டாம் மெஹ்மூத் எப்படியாவது ரோமப்பேரரசின் மேற்குத் தலை நகர் ரோம் நகரத்தை வெல்ல முடிவெடுத்தார். அதற்கான ஆரம்ப பணியாக அட்ரியாடிக் கடல்பகுதியை பலப்படுத்தி ஒட்ரண்டோ, அபூலியா பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். ஒட்ரண்டோ பகுதியில் ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்தார்கள். இடையில் இரண்டாம் மெஹ்மூத் 1481 மே 3 ல் மரணமடைந்தார். புதிய திட்டத் துடன் பிறகு, இத்தாலிய தீபகற்பத்தை முற்றுகை இடலாம் என்று படைகள் கிழக்கு அட்ரியாடிக் கடலுக்கு திரும்ப அழைக்கப்பட்டன.
                                    இரண்டாம் மெஹ்மெதுக்குப் பிறகு, சுல்தான் முதலாம் செலிம் என்பவர் பதவிக்கு வந்து ஆட்சியர்களில் சக்திமிகுந்தவரானார். எகிப்தில் ஓட்டோமான்கள் ஆட்சியை நிறுவி னார். ஷியா பிரிவைச் சேர்ந்த ஈரானிய பெர்ஷிய சஃபாவித்கள் அரு காமை நகரங்களிலும், ஓட்டோமான் மாகாணங்களிலும் பலம் பெற்றுவந்தார்கள். அவர்கள் புதிய ஆட்சி வேண்டுமென்று ஊர்வ லங்கள் நடத்தி வந்தார்கள். சுல்தான் முதலாம் செலிம்  ஷியா பிரிவு ஷா இஸ்மாயிலை 1514 ல் சால்திரன்போரில் வென்று அவர் களை அடக்கினார். கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் பேரர சை விரவு படுத்தினார். அதாவது, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் அரேபியா பகுதிகளை வென்றார். 1516 ல் ஓட்டோமான்கள் அலிப் போ மற்றும் டமாஸ்கஸ் நகரங்களைக் கைப்பற்றி மம்லுக்குகளை இராணுவம், அரசியல் என்று எதுவுமில்லாமல் செய்தார்கள். 1520 ல் சுல்தான் முதலாம் செலிம் மரணமடையும் போது, பேரரசு செங்கட லிலிருந்து க்ரிமியா வரையும், குர்திஸ்தானிலிருந்து போஸ்னியா வரையிலும் பரவி சர்வதேச அரசியலில் குறிப்பிடப்படும் உச்சத்தை அடைந்தது. சுல்தான் முதலாம் செலிமை சரித்திரத்தில் ‘பயங்கர மானவர்’ (THE GRIM) என்று குறிப்பிடுகிறார்கள்.
                           முதலாம் செலிமுக்கு பிறகு, வந்த முதலாம் சுலைமான் என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த ஓட்டோமான் பேரரசராக திகழ்ந்தார். இவரை சட்டம் கொடு த்தவர் என்று புகழ்ந்தனர். இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நடைமு றைக்கு கொண்டு வந்தார். பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுக ளில் ஓட்டோமான் பேரரசு நீண்ட போர்களையும், பேரரசை ஐரோப் பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் விரிவுபடுத்து வதிலும் ஆர்வம் காட்டியது. சுலைமான் 1521 ல் பெல்கிரேடை வெற்றி கொண்டார். ஹங்கேரியின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளையும் வென்றார். 1526 ல் மொஹாக் போரில் வெற்றி கண்டு மேற்குப்பகுதி அல்லா மல் தற்போதைய ஹங்கேரி முழுவதையும் ஓட்டோமான்கள் பேர ரசின் கீழ் கொண்டு வந்தார். இந்த போரில் ஹங்கேரியர்கள் இறந் துபோன மன்னரையும், தளபதிகளையும் போர்களத்திலேயே விட்டு விட்டு ஓடினார்கள். 1526 ல் செயிண்ட் ஜான் மன்னனிட மிருந்து ரோட்ஸ் தீவுகளை வென்றார். 1529 ல் வியன்னாபோரில் ஈடுபட்டு கடுமையான குளிர்காலமானதால் சுல்தான் போரை நிறுத்திக் கொண்டார். மீண்டும் 1532 ல் வியன்னாவின் மீது படையெடுத்து கூன்ஸ்போரில் ஈடுபட, ஆகஸ்டு மாத கடுமையான மழையால் கூன்ஸ் கோட்டையிலிருந்து 97 கி.மீ தெற்கில் பின்னோக்கி வந்து விட்டார். 1535 ல் கிழக்கில் பாக்தாத், மெஸோபொடா மியாவைக் கைப்பற்றி பெர்ஷிய கடல்பகுதியை கட்டுப்படுத்தின. 1547 ல் ஹாப் ஸ்பர்கின் ஆட்சியாளர் ஃபெர்னாண்ட் ஹங்கேரியில் ஓட்டோமான் ஆட்சியை ஒப்புக்கொண்டார். சுலைமானின் ஆட்சியில் டிரான்சில் வேனியா, வல்லாச்சியா மற்றும் மோல்டாவியா ஆகியவை ஓட் டோமான்களுக்கு கப்பம் செலுத்த ஒத்துக்கொண்டன. ஓட்டோமான் கடல்படை கருங்கடல், ஏஜியன் கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடல்பகுதிகளின் வழியாக இத்தாலிய நகரங்களில் வாணிபம் செய்து வந்தது. அதேநேரத்தில் போர்ச்சுகீசியர்கள் செங்கடல் மற் றும் இந்தியப் பெருங்கடலில் வாணிபம் செய்து வந்தனர். நிலப்ப குதி வழியாக நகரங்களிலும் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையே வாணிபம் செய்து நல்ல பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. சுலைமானின் ஆட்சியின்போது பேரரசின் மொத்த மக்கள் தொகை 15,000,000 ஆக இருந்தது.

கருத்துகள் இல்லை: