ஜெங்கிஸ்கானின் வெற்றிகள்
இவரை உலகத்தின் முதல் மாவீரனாக சித்தரிப்பதில் அழுத்தமான உண்மை கள் பலவுள்ளன.
நெப்போ லியன், அலெக்ஸாண்டர் எல்லாம் வழக் கம்போல்
மேற்கத்தியர்களால் மிக அள வுக்கதிமாக புகழப்பட்டவர்
கள். அவர்களும் வீரர்கள்தான் சந்தேகமில்லை. ஆனால், ஜெங்கிஸ் கான் அளவுக்கு இல்லை.
ஜெங்கிஸ்கான் எந்த நவீன ஆயு தங்க ளும்
பயன்படுத்தியதில்லை. இயற்கையான அப்பழுக்கற்ற வீரம் அது. பழங்குடியினராதலால்
மலைகளில் சர்வசாதாரணமாக குதி ரை விளையாட்டு, ஒப்பற்ற வேகம், தப்பாத குறி
இவையெல்லாம் தான் அவருக்கு வெற்றிகளைத் தேடித் தந்தன. இவருக்கு அமைந்த வீரர்களும்
தனி சிறப்பு வாய்ந்தவர்கள். குதிரைவீரர்கள் சர்வசாதார ணமாக எந்தவிதமான பயணப்
பாதையிலும் பய ணித்து ஒரு நாளைக்கு 200 மைல் தூரத்துக்கு செய்தி கொண்டு
செல்வார்கள். பருந்துகளும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டன. இவருக்கு அமைந்த
வீரர்கள் இராஜவிசுவாசத்திற்கும், பயத்திற்கும் பணிந்த வர்கள். மிகவும் தந்திர மாகவும்,
உயர்தரத்திலும் தமது பழங்குடி மக்களுக்கு நகரங்களில் இருப்பிடம்
அமைத்துக்கொடுத்தார். வீரர் கள் குதிரைகளில் விரைந்த வண்ணம் எறிஈட்டி களை எரிவதில்
மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அந்தகால கட்டத்தில் ஆங்கில படைகள் 250 யார்டு
தூரத்தில் எரிவதை மங்கோலிய வீரர்கள் 400 யார்டு தூரத்தி ற்கு குறிதப்பாமல்
எரிவார்கள். உலகில் இந்த மங் கோலிய வீரர்களுக்கு இணை யான வீர்ம் அப்போது எங்கும்
காண ப்படவில்லை என சரித்திரம் சொல்கிறது. முதலில் தோல்வியுற்றது போல் மலைகளுக்குப்
பின்னால் திரும்பி ஓடுபவர்கள் மீண்டும் புய லைப்போல் பன்மடங்காக அம்பெய்த வண்ணம்
வருவார்கள். அவர் கள் வந்தால் எதிரிப்படை இருந்த இடம் துடைத்தெறியப்பட்டது போல் இருக்கு
மாம். போர்புரிவதை காதலித்துச் செய்தார்களாம்.
இவர்கள் பெரும்பாலும்
தங்கள் வசிப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்ய செல்வதால் போகுமிடமெல் லாம்
உணவுக்கும், உடமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள். வெற்றி இல்லை என்றால்
உணவில்லை அதனாலே யே மிகவும் கொடூரமாக போரிடுவார்கள். இவர்களின் காட்டுமிரா ண்டித்
தனமான பழங்குடி பழக்கவழக்க போர்முறை, முரட்டுத்த னம், உளவுபார்க்கும் நூதனம்
இவையெல்லாம் மிகவும் புதுமை யாக இருந்தது அப்போது. இவரிடம் இருந்த ‘ஜெபி’ என்ற
இராணுவ கமாண்டர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரை “தி ஏரோ” என்றும்
புகழுரைத்தார்கள். ஜெங்கிஸ்கான் தன்னுடன் தைரியமாக போரிட்டு தோற்கும் எதிரியை மன்னித்து
மங்கோலியப் படையில் சேர்த்துக் கொள்வார். ஆனால், தங்கள் பழங்குடியினரை அவமதிப்பவர்
களை யும், துரோகிகளையும் மன்னிக்காமல் உடனே தண்டனை கொடுப் பார். தான் செல்லும்
நகரங்களை முன்னாலேயே உளவாளிகளை வைத்துக் கண்காணிப்பார். அவர்களுக்கு தேவைப்பட்ட
பொருள் களை லஞ்சமாகக் கொடுப்பார். மங்கோலி யர்கள் ஒரு இடத்தில் கால் வைத்தால் அது
100% வெற்றியாக வேண்டும் என்பதில் குறி யாக இருப்பார். எதிரிக்கு நேரடியாக இரண்டே
வாய்ப்புதான் கொடுப் பார். ஒன்று தன்னுடன் போரிடவேண்டும் அல்லது சரணடைந்து விடவேண்டும்.
இவர் ஒரு பகுதியை வெற்றி கொண்டால் அந்த செய்தி உடனே அடுத்துள்ள பகுதிகளு க்கு
விரைவில் தெரியப் படு த்தி விடுவதில் குறியாக இருப்பார். ஒருவேளை ஏதாவது ஒரு எதிரி
தன்னுடன் தைரியமாகப் போரிட்டால், இறுதியில் அவர்களை பொது மக்களின் முன்னிலையில்
வைத்து கடுமையான முறையில் தண்டி த்து பார்ப்பவ ருக்கு பயத்தை ஏற்படுத்துவார். நூற்றாண்டுகளுக்கும்
மேலாக மலை சூழ்ந்த பகுதிகளுக்குள்ளேயே வாழ்ந்த ஒரு கூட்டத் தின்
மனிதனிடத்திலிருந்து வந்த வீரம் கண்டு உலகம் இன்றளவும் வியக்கிறது. ஆனால், அது
ஆத்திரத் தாலும், அவமானத்தினாலும் வந்த சமுதாயத்தின் மீது வந்த கோபம். நாடோடிக்
கூட்டத்தின் தலைவனான தன் தந்தையைக் கொன்று, இளவயதிலேயே தன்னை அனாதையாக்கிய
வேதனையின் வெளிப்பாடு. அந்த கோபத்தையும், வேதனையும் இறக்கி வைக்க அவர்
தேர்ந்தெடுத்த இடம் அந்த மலைசூழ்ந்த பகுதியின் வெளிப் புறத்தில் பூமி எங்கும்
பரவியிருந் தது.
மற்ற இராணுவங்கள்
இரும்பாலான பீரங்கியை பயன்படுத்தி வந்த நேரத்தில் ஜெங்கிஸ்கான் பித்தளை யாலான
பீரங்கியை எந்த விதமான தட்பவெப்ப சூழ்நிலையிலும் பயன்படுத்தச்செய்தார். மங்கோலியர்கள்
எந்த ஒருநகரத்தில் நுழை யும் முன் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் போல் நுழைவார்கள்.
நகரத் தின் உள்ளே இருக் கும் உளவாளிகளால் சரணடைந்து விடுவது நல் லது என்பதுபோல்
ஆட்சியாளருக்கு அறிவுரை சொல்லப்படும். பெரு ம்பாலும் ஐரோப்பிய வைக்கிங்குகள் போல்
கொள்ளையடித்து விட் டுத் திரும்பி விடுவார்கள். தன் ஆட்சியின் போது ஒன்றரை மில்லி யன்
பழங்குடியின் மக்களுக்கும், தன்னாள் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு மில்லியன் மற்ற
நாடோடிக் கூட்ட மக்களுக்கும் ஆட்சியா ளராக இருந்தார். நீண்ட மேற்கத்திய
தாக்குதலுக்குப் பிறகு, 1225 ல் மங்கோலியா திரும்பினார். பின் தனது கவனத்தை மீண்டும்
வட சீனாவின் மீது திருப்பினார். ஏற்கனவே ஸி ஸியா மாகாணம் வெற் றி கொள்ளப் பட்டபோது
ஒப்புக்கொண்ட ஆண்டுகப்பத் தொகையை ஸி ஸியா மன்னன் கட்ட மறுத்தான். மேலும் இம்முறைப்
போரிட் டால் மங்கோலியர்கள் வெல்லமுடியாது என்ற கருத்தில் இருந்தா ன். ஜெங்கிஸ்கான்
இந்த முறை எப்படியாவது ஸி ஸியா வை குறையில்லாமல் வெற்றி கொள்ள எண்ணினார். 180,000
வீரர்களு டன் கடுமையான குளிரில் உறைந்து போயிருந்த மஞ்சள் ஆற்றில் போரிட்டார்.
மிகுந்த உயிர் சேதம் ஏற்படுத்தி, பல நகரங்களை அழி த்து வெற்றி பெற்றார். 1227 ல்
ஒரு வேட்டையின்போது குதிரையிலி ருந்து முறையில்லாமல் விழுந்ததில் பலத்த காயமுற்று
சிறிது நாளில் இறந்து போனார். ஜெங்கிஸ்கானின் இறப்பிற்குப் பிறகு, மங் கோலியர்கள்
கூடி அடுத்த தலைவராக ஜெங்கிஸ்கானின் இரண்டா வது மகன் ஒகிடாய் என்பவரைத்
தேர்ந்தெடுத்தனர். ஜெங்கிஸ்கா னும் இறப்பதற்கு முன இவரையே தேர்ந்தெடுக்க
கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக