ஃப்ராங்ஸ்குகள் ஏதோ இஸ்லாத்துக்கு
சம்பந்தமில்லாதவர்கள் என்று எண்ணவேண்டாம். இஸ்லாத்தை யூதர்களுக்கு அடுத்து
ஆதியிலிருந்து எதிர்த்து வரும் இரத்தவெறி பிடித்த ராஜவம்சக்கூட்டம். ஐரோப்பிய
நாடுகளில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள். பலம்
வாய்ந்த அமெரிக்க டாலரை வீழ்த்தி ஈரோ என்ற நாணயத்தை பல எதிர்ப்பு களுக்கிடையில்
வெளியிட்ட அறிவாளிகள். டயானா, டோடி படுகொ லையின் மூலக் குற்றவாளிகள். இன்றைய
நேட்டோ படையின் கூட் டாளிகள். ஸ்பெயின், ஃப்ரான்சிலிருந்து இஸ்லாத்தை விரட்டியவர்கள்.
நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவதூறாகப் பிரசாரம் செய்வதற்கும், ஹிஜாப் அணியக்கூடாது
போன்ற இஸ்லாத்துக்கு எதிரான சட்டங் களுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் யார், இவர்களின் உறவுமுறை என்ன எப்படி
ஆட்சிகு வந்தார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளவே இந்த தொடர்.
ஃப்ராங்க்ஸ்கள் எனப்படுபவர்கள் பிரான்ஸும்,
பிரிட்டிஷும் இணைந்த கூட்டுப்படையினராவர். ஃப்ராங்க்ஸ்கள் தான் முதலில் பிரான்சில்
ராஜவம்ச வழியை கொண்டுவந்தவர்கள். அடிப் படையில் ஜெர்மனியின் பழங்குடிப் பிரிவின்
ஒன்றிலிருந்து தான் ஃப்ரான்ஸ் என்ற வார்த்தை வந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் மெரோ வின்ஜியன் பேரரசில்
மெரோவிச் என்ற தலைவர் இருந்தார். ஃப்ராங்க்ஸ்களின் எதிர்காலம் இவரின் பேரன்
க்ளோவிஸ் என்பவனில் இருந்து துவங்கியது. 481 ல் க்ளோவிஸ் முடிசூட்டிக்கொள்ளும்
போது 15 வயது. அப்போது இந்த மெரோவின்ஜியன் பேரரசின் தலைநகரம் தூர்னை (தற்போதைய
தெற்கு பெல்ஜியம்). க்ளோவிஸின் இரண்டு செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவின்
சரித்திரத்தை மாற்றியது. ஒன்று தன் பார்பேரிய (பார்பரியம்
என்றால் நாகரீகமற் றவர்கள், காட்டுமிராண்டிகள் என்று பொருள்) மன்னராட்சியை
ஆல்ப்ஸ் மலையின் வடபகுதி வரை பரப்பினான். இரண்டு ரோமன் கத்தோலிக்க
கிறிஸ்தவனாக மதம் மாறினான். மற்ற பார்பரிய ஆட்சியாளர்கள் அரியனிஸம் என்ற
மதக்கொள்கையில் இருந்தார்கள். க்ளோவிஸ் சோம்மி என்ற பகுதியில் இருந்து லொய்ரி என்ற
பகுதி வரை மனசாட்சியற்ற வகையில், பல சதித்திட்டங்கள் தீட்டி சக பழங்குடியின
பகுதிகளைக் கைப்பற்றினார். தென் கிழக்கிலிருந்த பர்கண்டியர்களை தனக்கு மரியாதை
செய்ய வற்புறுத்தினான். தென் மேற்கில் விசிகோத் என்பவர்களையும் வென்று 507 ல்
மெடிட்டரே னியன் கரை தவிர்த்து மொத்த பிரான்சையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்தான்.
இந்த வெற்றிக்கு அவன்
கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியதும், காவுல் பகுதி மற்றும் ரோமுக்கு மரியாதை செலு த்தும்
மற்ற அரிய இன விசிகோத்களும் பெரிதும் உதவியது தான் காரணம். மேலும், சிறந்த
கிறிஸ்தவ வம்சத்தை தன்னுடன் இணை த்துக்கொண்டான். கான்ஸ்டண்டைன் பகுதியை வென்றதின்
மூலம் கெண்டைச் சேர்ந்த பக்திமிகுந்த ஈதெல்பெர்ட் என்பவளை திருமணம்
செய்திருந்தான். மீண்டும் பர்கண்டிய இளவரசிகளோ டில்டா என்பவளை மணந்தான். எதிரியான
மற்றொரு ஜெர்மனிய பழங் குடியான அலமன்னியை தோற்கடிக்க தன் கணவனின் கிறிஸ்தவ
மதமாற்றமே காரணம் என்றுகூறினாள். அலமன்னியை வென்றதின் பிறகு, அவனின் இராணுவத்தினர்
3000 பேரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். க்ளோவிஸ் பாரிஸை தலைநகராக மாற்றிக் கொண்டு
கிறிஸ்தவத்திற்கு முன்பிருந்த புராதன ‘சாலியன் ஃப்ராங்க்ஸ்’ சட்டங்களை இயற்றினான். இவனின் தலைநகர் மாற்றத்திற்கு
பெரிய எதிர்ப்பு கிளம்பி கலவரமாகியது. இவனின் சாலியன் சட்டத்தை மட்டும் சில நாள்
கழித்து ஏற்றுக்கொண்டனர். வட ஐரோப்பாவிலும், பிரான்சிலும் இவன் மன்னராட்சி புதிய
எழுச்சியாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் மாறியது.
511 ல் க்ளோவிஸ் இறந்த
பிறகு இவனது பகுதிகள் இவனின் நான்கு மகன்களால் பிரிக்கப்பட்டது. அவன் நீண்டகாலமாக
உருவாக்கிய பேரரசு சமபாகமாக பிரிக்கப்பட்டு வலுவி ழந்தது. சில நாட்களில் மீண்டும்
விரிவாக்கப்பட்டு முற்காலங் களில் மரியாதை செலுத்திய பர்கண்டி இணைக்கப்பட்டு 534
ல் ஃப்ரங்கிஷ் மன்னராட்சியானது. ஃப்ரங்கிஷ் மூன்று தனி மன்னராட்சியாக மாறியது.
பழைய இடங்களும், நவீன பெல்ஜியம் மற்றும் வட கிழக்கு பிரான்சும் இணைந்து
ஆஸ்ட்ரேஷியா ஆனது. க்ளோவிஸால் வெற்றி கொள்ளப்பட்ட மத்திய பிரான்சு பகுதி
நியூஸ்ட்ரியா என்று அழைக்கப்பட்டு, பர்கண்டி அதன் சொந்த பெயரிலேயே இருந்தது. இரு
ஆண்டுகளுக்கும் மேலாக க்ளோவிஸின் வழிவந்த வாரிசுகள் ஆண்டுவந்தார்கள். இடையில்
நியூஸ்ட்ரியாவும், பர்கண்டியும் இணைக்கப்பட்டன. பின்னாளில் எல்லா பகுதிகளும்
ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே அதிகாரத்திற்கு வந்தது. 613 லிருந்து 639 வரை இரண்டாம்
க்ளோடயர் மற்றும் அவன் மகன் முதலாம் டகோபெர்ட் ஆகியோரின் ஆட்சி உதாரணமாக அமைந்தது.
டகோபெர்ட் இறந்ததும் ஃப்ரங்கிஷ் மன்னர்கள் மெதுவாக தங்கள் சொந்த அதிகாரத் தை இழக்க
ஆரம்பித்து, ஜப்பானின் ஷோகுன் போல் அரண்மனை மேயர் மன்னரின் சமஅந்தஸ்துக்கு
வந்தார்.
ரோமர்கள் சாம்ராஜ்ஜியத்தில் ‘மஜோர் டோமஸ்’ என்ற
பதவியில் ஒருவர் இருந்து கொண்டு அரசு நிர்வாக த்தைக் கவனித்துக் கொள்வார். ஃப்ரங்கிஷ்
மன்னர்களும் அதே போன்று பதவிஉருவாக்கி தங்கள் ஆட்சியில் தலைமை நிர்வாக அதிகாரியை
‘மேஜர் பலாட்டி’ என்று அழைத்தனர். மேஜர் பின்னாளில் மேயர் என்று ஆகியது. இந்த
மேஜர் பலாட்டிகள் மன்னருக்கும், இளவரசருக்குமான தொடர்புகள், ஆட்சியில் மன்னருக்கான
ஆலோசனைகள், இராணுவ உத்தரவுகள் ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டனர். ஏழாம்
நூற்றாண்டின் இடையில் ஆஸ்ட்ரேஷியா, நியூ ஸ்ட்ரியா மற்றும் பர்கண்டிக்கான
மேயர்களுக்கிடையே அதிகா ரத்தில் குழப்பம் ஏற்பட்டது. 679 ல் இரண்டாம் பெபின் என்ற
ஆஸ்ட்ரேஷியாவின் மேயர் ஒரு மேயரின் கட்டுப்பாட்டில் தான் அனைவரும் செயல்படவேண்டும்
என்று விடாமல் போராடி மூன்று அரசுக்கும் தானே முதல்முறையாக மேயரானார். இவரின்
அதிகாரத்தில் புதிய கம்பீரமான பேரரசு உதயமானது. 714 ல் இரண்டாம் பெபின்
மரணமடைந்தவுடன் கலவரம் வெடித்தது. இரண்டாம் பெபினுக்கு முறையான குழந்தைகள் இல்லை.
தவறான உறவுகளின் மூலம் பிறந்த மகனும், பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள். உள்நாட்டு
கல வரத்தில் இரண்டாம் பெபினின் முறையற்ற மகன் சார்லஸ் வென்று நாட்டை
கைப்பற்றினான். இவனின் இராணுவத்திறமையால் சார்லஸ் மார்டெல் “தி ஹாம் மர்” என்று
ஐரோப்பியர்களால் பின்னாளில் புகழப்பட்டான். இவனின் கிறிஸ்தவப் பெயர் கரோலஸ் (CARO LUS) என்பதால் இவனின் கீழ் வந்தவர்கள்
கரோலின்ஜியன்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக