முதல்
உலகப்போர் உச்சத்தில் இருந்தது. 1917 ல் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தலைமையில்
இந்தியப்படையின் ஒரு பகுதி தற் போதைய குவைத் நாட்டில் இறங்கி, யூப்ரடிஸ் நதி
நோக்கி நகர்ந்தது. பிரிட்டிஷ் காரர்களுக்கு ஈராக்கில் நுழைவது இது ஒன்றும்
முதல்முறையல்ல. 1915 ல் அப் போதைய கலீஃபா மற்றும் ஜெர்மனியால் பிரிட்டிஷார்கள்
பலமாகத் தோற்கடிக்க ப்பட்டார்கள். இந்த முறை பிரிட்டிஷார் வலிமையான படையுடனும்,
சக்திவாய்ந்த ஆயுதங்களுடனும் வந்திருந்தார்கள். துல்லியமாக பஸ்ரா மற்றும் நஸரியாஹ்
நகரங்களில் கடுமையான போர் நிகழ்ந்தது. ஒரு குறிப்பிட்ட அளவில் அமைக்கப் பட்ட அந்த
இந்தியப்படையானது டெல்லி மற்றும் பெஷாவரிலிருந்து வீரர்களைத் தேர்வு
செய்திருந்தது. தடுப்புப்போரில் ஈடுபட்ட துருக்கிகளை வென்று இந்தியப் படை 1917 ல்
பாக்தாதைக் கைப்பற்றியது.
அதன்பிறகு, 86
ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கக் கூட்டுப்படைகள் சதாம்ஹுசேனின் படைகளை
முறியடித்து அதே குவைத்திலிரு ந்து முன்னேறி பாக்தாத் நகரத்தை கைப்பற்றியது. மீண்டும்......மீண்டும்.....மீண்டும்
பாக்தாத் நகரம் ஒரு கைப்பற்ற நகரமாகவே சரித்தில் இடம் பெற்றுக் கொண்டிரு க்கிறது.
இஸ்லாமிய சரித்திரம் அறிந்தவர்களுக்கு இந்த பாக்தாத் நகரத்தின் அரு மை தெரியும்.
டைக்ரஸும், யூப்ரடீஸ் நதியும் நீர் நிறைந்து புரண்ட அந்த நகரம் இஸ்லாமிய
ஆட்சிகாலத்தில் பல பேரரசுகளை மாறி மாறி சந்தித்தது. அந்த நகர மக்கள் இன்பத்தையும்,
அதைவிட அதிகமான துன்பத்தையும் சரித்திரத்தில் நெடு ங்காலமாக சந்தித்தவர்கள். ஆறாம்
நூறாண்டுகளிலிருந்து ஒரு சுழற்சி போல பாக்தாத் நகரம் தொடர்ந்து சோகச் சூழ்நிலைக்கு
வந்துவிடும்.
அதற்கு அந்த
நகரத்தின் உள்ளேயும், வெளியேயும் உள்ள பிரச்சினைகள்தான் காரணம். நாம் வெளியே இருக்கும்
காரணத்தை பார்ப் போம். முதலில் ஓட்டோமான் பேரரசாலும், பிறகு, மங்கோலிய மன்னன்
ஹுலகு வாலும் பாக்தாத் என்னும் உலகின் அழகிய கலாச்சாரத்திற்கும், அறிவுக்களஞ்சி
யத்திற்கும் பெயர் போன நகரம் நிர்மூலமாக்கப்பட்டது. இன்றைக்கும், எப்போதும் உலகின்
மிக அழகிய பெண்கள் பாக்தாதிலும். இஸ்ரேலிலும் தான் உள்ளார்கள். முதலில் பாக்தாத்
நகரம் ஓட்டோமான் பேரரசால் வெற்றி கொள்ளப்பட்டு உருக் குலைந்தது. ஏறக்குறைய 200
ஆண்டுகள் இவர்கள் வசம் இருந்ததால் இஸ்லாமி
யர்களின் இதயப்பகுதி நகரமான இதில் ஐரோப்பியர்களின் காலணித் தடங்கள் இங்கு பதியவில்லை.
இங்கு அரபியர்கள் தாய்மண் காலனிகளாக மாற்றப்பட் டன. பதிமூன்றாம் நூற்றாண்டுகளில்
கிலாஃபத் இயக்கத்தால் துருக்கிகள் வெளி யேறினர். அனடோலியாவும், ஈரானையும் தவிர
அனைத்து முஸ்லீம் பகுதிகளும் ஐரோப்பியர்களின் அதிகாரத்தில் ஆளப்பட்டது.
அவ்வப்போது பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும்
ஜெர்மனால் சொல்லப்பட்ட அமைதி மட்டும் நடக்கவே இல்லை. முடிவு காணாமல் போன முதல்
உலகப்போர் 1930 ல் ஹிட்லரின் போராக மீண்டும் வந்தது. அதிகப்படியான இரத்த மும்,
கொலைகளும் சீனா, ஜப்பானில் நிகழ்த்தப்பட்டன. தவறான பக்கம் சாய்ந்ததில் இஸ்லாமிய
உலகம் குழப்பத்திலேயே இருந்தது. லட்சக்கணக் கான முஸ்லீம் நிலங் கள் அடாவடியாக
காலனிப்படைகளால் பறித்துக் கொள்ளப் பட்டன. அநியாயங்கள் சாதாரணமாகிப் போயின.
இரண்டாம் உலகப்போரிலும் அதைவிட அதிகமான இழப் புகளையே சந்திக்க நேரிட்டது.
பிரிட்டன் தன் பங்கு க்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு நகர்ந்து
கொண்டது. 1956 ல் இந்திய இராணுவமும் இல்லாததால் பிரி ட்டன் சூயஸ் கால்வாய்
விவகாரத்தில் முழு வீச்சில் இறங்கமுடியாமல் போனது. இந்தோனேஷியாவிலும் டச்சு பேரரசு
விலகி கொண்டது. பிரான்சும் வியட்நாமில் 1954 ல் தோல்வியுற்று திரும்பியது. ஐரோப்
பிய சக்திகள் முறையே விலகிப்போன தால், பாகிஸ்தான்(1947), இந்தோனேஷியா (1948),
எகிப்து (1956), மலேஷியா(1960), நைஜீரியா (1960) நாடுகள் சுதந்திரம் அடைந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக