மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பெர்ஷிய வரலாறு 4



490 (B.C.E.) பெர்ஷியர்கள் எப்போதுமே க்ரீக்குக்கு மிரட்டலாக இருந்ததில்லை. ஆனால், கிரேக்கர்கள் பெர்ஷிய பூமியில் தாக்குதல் செய்பவர்களாக இருந்தார்கள். பெர்ஷிய நகரங்களையும், கோவில்களையும், வியாபார பாதைகளையும், பாஸ்ஃபோரஸை கடக்கும் கப்பல்களை தாக்குவதாகவும் இருந்தார்கள். பெர்ஷியாவுக்குள் புரட்சியாளர்களை ஊடுருவ விட்டார்கள். சர்தீஸ் என்னும் பெர்ஷிய பெருநகரத்தில் ஏதென்ஸ்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தினார்கள். லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றார்கள். இவ்வளவுக்குப் பிறகும் பெர்ஷியர்கள் கிரீஸ் மீது போர் தொடுக்க விரும்பவில்லை. மூன்று கண்டங்கள் விரிந்திருந்த பெர்ஷியாவில் கிரேக்கர்களும் இருந்தார்கள். கிரேக்க தத்துவவாதிகளை மதித்தார்கள். அதிகமான கிரேக்கர்கள் பெர்ஷிய அரசில் பணியிலிருந்தார்கள். ஆனாலும், மேலும் பெர்ஷியா மீதான தாக்குதலை பொறுக்க முடியாமல் தெர்மோபைலாயி என்ற இடத்தில் போரிட்டார்கள். அதில் பெர்ஷியா வென்றதும் பழிவாங்கும் விதமாக மன்னர் ஸெர்செக்ஸ் அரண்மனைகளையும், அரசாங்க தலைமையகங்களையும் தீயிட்டு கொளுத்தி கிரேக்கர்களை கடுமையாக எச்சரித்தார். பிறகு, அவைகளை சீர்படுத்தி ஏதென்ஸ் மக்களை வந்து அங்கு குடியேற அழைத்தார். அவர்களும் வந்தார்கள். பெர்ஷிய மன்னர்கள் எப்படி குடிமக்களிடம் நடந்து கொண்டார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது.
485 (B.C.E.) பெர்ஷிய பேரரசின் காலனி ஆதிக்கத்திலிருந்த கிரேக்க நகரமான ஹலிகர்னாஷியஸை கிராண்ட் அட்மிரல் அர்டிமிசியா என்ற பெண்மனி ஆட்சி செய்தார். பெர்ஷிய கடற்படைக்கும் அட்மிரலாக இருந்து ஸெர்செக்ஸுக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தார். மிக சக்தி வாய்ந்தவராகவும், சுதந்திரமானவராகவும், புத்திகூர்மையுள்ளவராகவும் இருந்தார். அக்காயிமெனிட் பேரரசில் பல போர்களை வென்றார். கிரேக்கர்களை எதிர்த்து ஸெர்செக்ஸ் போரிடும் போது சலாமிஸ் என்னும் இடத்தில் தனது கடற்படையின் மூலம் பெரிதும் உதவினார். கிரேக்கர்கள் அர்டிமிசியாவின் தலைக்கு 10,000 ட்ராச்மஸ்கள் பரிசு விதித்தார்கள். ஆனால், யாராலும் அதைச் செய்ய முடியவில்லை. எந்த நேரமும் கிரேக்கர்களுடன் சண்டை இருந்து கொண்டே இருந்தது. சில நகரங்கள் பெர்ஷியர்களுக்கு ஆதரவாகவும், சில எதிர்ப்பாகவும், சில பொதுவாகவும் இருந்தன. அட்மிரல் அர்டிமிசியா பெர்ஷிய பேரரசில் பொது மக்களுக்கும் ஒரு மாதிரியாகவும், வாழும் சாதனையாளராகவும் இருந்தார். இதிலிருந்து வெறும் பெண்மனிகளின் வரலாறுகள் சில ஆண்டுகள் வருவதால் அவைகளை நாம் தவிர்த்து விடுவோம்.
பல ஆயிரமாண்டுகளாக ஈரானிய பழங்குடியினரின் இடமாக மத்திய ஆசிய மலைப்பகுதி இருந்தது. அஸ்ஸைரியன்களின் காலத்தில் இரண்டாம் சர்கான் என்பவர் ஆளும்போது ஈரானிய ஸைத்தியன்கள் என்ற பிரிவு இருந்தது. இராணுவத்திலிருந்த இவர்கள் கிழக்கு ஈரானிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அது தற்போது சிஸ்டான் என்னும் பகுதியாகும். இன்றைய ஈரானிய வரலாறுபடி “சகெஸ்டான்” (THE LAND OF SAKS) ஆகும். ஸைத்தியன்களின் பிறப்பிடமாகும்.
334 (B.C.E.) ஜனவரி மாதத்தில் மாசிடோனியாவின் மன்னன் அலெக்ஸாண்டர் பெர்ஷியாவை வெற்றி கொண்டு அதன் தலைநகரமான பெர்சிபாலிசை அடைகிறார். அலெக்ஸாண்டர் பெர்ஷிய மன்னர் சைரஸ் தி கிரேட் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவர் பெர்ஷியாவை வென்றார். ஆனால் பெர்ஷியாவின் கலாச்சாரம் அவரை வென்றது. பெர்ஷிய மன்னன் மூன்றாம் டேரியசின் மகள் இளவரசி ரோக்ஸானாவை அலெக்ஸாண்டர் மணந்து கொண்டார். தனது ஜெனரல்களையும், 10,000 வீரர்களையும் திருமண மரியாதை செய்ய வைத்தார். பெர்ஷிய, ஹெல்லெனிஸ்டிக் கலந்த கலாச்சாரத்தை பெர்ஷியாவில் முயற்சி செய்தார்.
அலெக்ஸாண்டரின் இராணுவம் பெர்ஷியாவில் கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும் செய்து, பலரைக் கொன்றும் பெர்சிபாலிஸ் நகரை தீயிட்டும் கொளுத்தினர். அவர் பல கட்டிடங்களைத் தகர்த்தும், பெர்சிபாலிஸ் நகரத்தின் நூலகத்தைக் கொளுத்தியும், ராஜ பொக்கிஷங்களையும் கொள்ளையடித்தார்.
334 (B.C.E.) அலெக்ஸாண்டர் சைரசின் கல்லறையில் மரியாதை செலுத்தினார். எதிரியாக இருந்தாலும் சைரசின் மீது அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதை இது வெளிப்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வரும் போது, அவர் பெர்சிபாலிஸ் நகரைக் கண்டு பெரிதும் வருந்தினார்.
323 (B.C.E.) அலெக்ஸாண்டரின் மறைவிற்குப் பிறகு, அவரின் ஜெனரல்கள் பேரரசை பல துண்டாக்கினார்கள். அலெக்ஸாண்டரின் பெர்ஷியா மீதான போர் பெர்ஷிய கலாச்சாரத்தை மேற்கில் அறிமுகப்படுத்துவதற்காக இருந்ததாக கருதப்படுகிறது. பின்னாளில் பெர்ஷிய சட்டம் ரோமப் பேரரசில் அறிமுகப்படுத்தப்பட்டது. அலெக்ஸாண்டரின் ஜெனரல் ஒருவரால் துண்டாடப்பட்ட பெர்ஷியாவில் ‘செல்யூசிட் பேரரசு’ என்று ஒன்று உருவானது. அது முழுக்க கிரேக்கர்களைச் சார்ந்ததாக இருந்தது. அவர்கள் பெர்ஷிய கலாச்சாரத்தின் மீது வெறுப்பு கொண்டு கிரேக்க கலாச்சாரத்தை கொண்டு வந்தனர். சில நல்லவையாக இருந்தன. கிரேக்க கலாச்சாரம் மிகவும் பணக்காரத் தனமாக இருந்தது. இது ஒரு வெளிநாட்டு கலாச்சாரமாக இருந்த காரணத்தால், தோல்வியையே தழுவியது. மீண்டும் பெர்ஷியர்கள் ஒருங்கிணைந்து செல்யூசிட்களைத் தோற்கடித்து பெர்ஷிய கலாச்சாரத்தை நிறுவினார்கள்.
247 (B.C.E.) பார்த்தியன்கள் (அஷ்கானியன்கள்) எனப்பட்ட வடகிழக்கு கடற்கரையோர பழங்குடியின பெர்ஷிய மக்களே போராடி மாசிடோனிய கிரேக்க செல்யூசிட்களைத் தோற்கடித்து மீண்டும் பெர்ஷிய பேரரசை கொண்டு வந்தார்கள். பார்த்தியன்கள் ஈரானிய மண்ணைச் சேர்ந்தவர்கள். ஸோரோஸ்ட்ரியர்களைப் போல் அக்காயிமெனிட் பெர்ஷியர்கள். ரோமப் பேரரசில் எப்படி மன்னர்கள் சீசரின் பெயரை பயன்படுத்தினார்களோ அதே போல் பார்த்தியன்கள் பேரரசை நிறுவிய அர்சாசிஸ் மன்னர் பெயரைப் பயன்படுத்தினார்கள். பார்த்தியன்களும் பலமுறை ரோமர்களுடன் போரிட்டார்கள். அவர்களின் ரோம வெற்றி பார்த்தியன்களை அந்த காலத்தில் பலம் வாய்ந்தவர்களாக அறிய வைத்தது. ஐந்நூறு ஆண்டுகளாக இருந்த இவர்களின் நாகரீகம் கொஞ்சமாக சுருங்கியது.
171 (B.C.E.) சில பார்த்தியன்கள் கிழக்கு கஸ்பியன் கடலின் கரையோரத்திலிருந்த பார்னி பழங்குடியினராவார்கள். அவர்கள் நாடாண்ட காரணத்தால் தாங்கள் அக்காயிமெனிட் பேரரசை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். பல கலாச்சாரங்களில் பார்த்தியன்கள் அக்காயிமினிட்களை ஒத்து தொடர்ந்தார்கள். பார்த்தியன்களின் அரசியல் கட்டமைப்பு அக்காயிமினிட்களை விட சற்று குறைவாகத்தான் இருந்தது. அவர்கள் பல பழங்குடியினத்தவர்கள் இணைந்து இருந்ததனால் சரியான ஒத்துழைப்பு அவர்களுக்குள் இல்லை. பெர்ஷிய சரித்திரத்தில் பார்த்தியன்களின் காலம் வளமானதாகவும், நிறைய கட்டிடங்களையும் கட்டினார்கள். ஆசியா மற்றும் மெடிட்டரேனியன் மூலம் நல்ல வாணிப வருமானமும் கிடைத்தது. உள் நாட்டு பாதுகாப்பில் வடகிழக்கில் எப்போதும் பிற பழங்குடியினரின் தாக்குதல் இருந்து கொண்டிருந்தது. மேலும், பல இடங்களில் தொடர்ந்து செய்தியன் களின் தாக்குதலும் இருந்தது.

பெர்ஷிய வரலாறு 3



545 (B.C.E.)  கஸ்ஸாண்டன் ஷாபானு என்னும் பெண்மனி சிறந்தவளாக திகழ்ந்தார். சைரஸ் தி கிரேட்டின் அன்பு மனைவி ராணி அமிடிஸ் காலமான பின் இவர் சைரஸ் தி கிரேட்டின் மனைவியானார். இவர் ஃபார்னஸ்பிஸ் என்பவரின் மகளாகவும், ஒடேன்ஸ் என்பவரின் சகோதரியாகவும் இருந்தார். கஸ்ஸாண்டேன் சைரஸ் தி கிரேட்டின் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில் இரண்டாம் கேம்பிசிஸ் தந்தைக்குப் பிறகு எகிப்தை வென்றார். அடுத்தவர் ஸ்மெர்டிஸ் இவரும் குறுகிய காலம் பெர்ஷிய மன்னனாக இருந்தார். இவருக்கு அதுஸா என்னும் இளவரசி பிறந்தார். இளவரசி அதுஸா பின்னாளில் அக்காயிமெனிட் ராஜ குடும்பத்தில் முக்கிய பங்கு வகித்தாள். டேரியஸ் தி கிரேட்டை மணந்தாள். சரித்திர ஆய்வாளர் ஹிரோடோடசின் குறிப்புப்படி, சைரஸ் தன் மனைவி கஸ்ஸாண்டேனை மிகவும் விரும்பினார். மனைவி இறந்தபின் மொத்த தேசத்தையும் வருத்தம் தெரிவிக்க வேண்டினார். அந்த கவலையிலேயே அடுத்த சில ஆண்டுகள் எதிலும் தலையிடாமல் இருந்து இறந்து போனார். ராணி கஸ்ஸாண்டேனின் அடக்கவிடம் பெர்ஷியாவின் பசர்கடாயி என்ற இடத்தில் ஸெண்டான் இ சொலைமான் என்னும் பெயரில் உள்ளது.
540 (B.C.E.)  அக்டோபர் 29 உலக சைரஸ் மனித உரிமை நாளாக கொண்டாடப் பட்டது. அந்த நாளில் தான் சைரஸ் பதவியேற்றார். மர்தூக் என்னும் கோவிலில் அடிமை சுதந்திரத்தைப் பற்றி பேசினார். 539 ல் சைரஸ் தி கிரேட் பாபிலோனியர்களிடம் சிறைப்படுத்தப் பட்டிருந்த 50,000 யூதர்களை விடுவித்து, அவர்களை சொந்த இடமான ஜெருசலத்திற்கு அனுப்பி அவர்களின் தேவாலயத்தையும் புதுப்பித்து கொடுத்தார். இதற்கெல்லாம் பெர்ஷியர்களின் வரி மூலம் வந்த பணத்தை செலவிட்டார். யூதர்கள் சைரஸ் தி கிரேட்டை பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட யாஹ்வேயினால் அனுப்பப்பட்ட மெஸ்ஸியா இவர் தான் என்று புகழ்ந்தனர். சைரஸ் தி கிரேட்டின் மனித உரிமை பற்றிய புத்தகம் 2000 வருடங்கள் புகழ் வாய்ந்தது. இதை மக்னா கார்டா என்பவர் உறுதி செய்தார். மேலும், 1971 ல் ஐக்கிய நாட்டு சபை அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டது. உலகின் முக்கிய பொக்கிஷமாக கருதப்படும் அது பிரிட்டிஷ் மியூசியத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. மேலும், ஐக்கிய நாட்டு சபையின் தலைமையகம் நியூ யார்கிலும் பாதுகாக்கப் படுகிறது.
530 (B.C.E.)   மத்திய ஆசியாவில் மஸ்ஸாகெட்ஸ் என்பவர்களுடனான போரில் விஷம் தோய்ந்த அம்பினால் காயமுற்று சைரஸ் தி கிரேட் மரணமடைகிறார். சைரஸ் தி கிரேட் இன்றளவும் உலகின் சிறந்த தலைவரில் ஒருவராக கருதப்படுகிறார். தான் ஏற்றுக்கொண்ட ஸோரோஸ்ட்ரியனிசத்தைக் கூட தன் வரையில் வைத்துக்கொண்டார். அதை தன் மக்களிடம் கட்டாயப்படுத்தவில்லை. போர் சமயங்களில் விட்டு விட்டு போகாமல் கடைசி நிலை வீரருடன் நின்று சமமாகப் போரிட்டார். அவரின் விருப்பப்படி பசர்கடாயியில் பெர்ஷிய மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார். தன் அடக்கவிடத்தை வணங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
529 (B.C.E) சைரஸ் தி கிரேட்டின் மகன் இரண்டாம் கேம்பிசிஸ் ( கம்புஜியா) பெர்ஷியாவின் மன்னரானார். இவரும் தந்தையைப் போலவே ஆட்சி செய்தார். ஆனாலும், கிரேக்க சரித்திர ஆய்வாளர் ஹிரோடோடஸ் கேம்பிசிஸின் வாழ்க்கையில் நிறைய ரகசியங்கள் இருப்பதாக கூறுகிறார். இவர் மனநிலை சரியில்லாதவராகவும், அதனால் தான் எகிப்தின் புனித காளையைக் கொன்றார், கடைசி எகிப்து பாரோஹ் மன்னன் அமஸிசின் உடலை எரித்தார் மேலும் 522 ல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகிறார்.
கேம்பிசிஸ் எகிப்தை வென்ற பிறகு, தன் படை வீரர்களால் சேதமாக்கப்பட்ட புனித நெய்த் கோவிலை புதுப்பித்தார். பெர்ஷியாவிற்கு திரும்பும் வழியில் இவரது 50,000 படை வீரர்கள் பாலைவன புழுதிக்காற்றால் விழுங்கப்பட்டனர். இது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு மர்மமாகவே இருந்தது. கேம்பிசிஸ் எகிப்தை வென்ற பிறகு, மறைந்து விடுகிறார். சிலர் அவர் சகோதரர் ஸ்மெர்டிஸ் புரட்சியின் மூலம் கேம்பிசிஸை மறைத்துவிட்டு அவர் மன்னராகி விட்டார் என்றனர். பின்னால் வந்த டேரியஸ் தி கிரேட் ஸ்மெர்டிஸை வெளியேற்றினார்.
522 (B.C.E.) டேரியஸ் தி கிரேட்டின் ஆட்சியில் பெர்ஷிய பேரரசு வானுயர எல்லையை தொட்டது. சைரஸின் எல்லா பாரம்பரிய வழக்கங்களையும் கடைபிடித்தார் .அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்தார். சாலைகள், துறைமுகங்கள், வங்கிகள் மற்றும் நைல் நதியிலிருந்து பூமிக்கு கீழேயே சென்று செங்கடலை தொடும் வண்ணம் கால்வாயும் அமைத்தார். இவர்தான் முதன்முதல் சுங்கவரி விதிப்பை கொண்டு வந்தார். பெர்சிபாலிசிக்கு அரண்மனையைக் கட்டினார். தி டரிக் என்னும் நாணயமுறையை முதலில் அறிமுகப்படுத்தினார். 2500 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்து பேரரசின் அனைத்து பகுதிகளையும் இணைத்தார். இவரின் மற்றொரு ராயல் ரோடு என்னும் திட்டம் மிகப் பிரபல்யமானது. உலகின் முதல் நீண்ட சாலை 1,500 மைல்கள் நீண்டது. மூன்று மாதங்களில் பயணிக்கும் தூரத்தை ஒன்பது நாட்களில் சுருக்கியது. இவரின் பனி, மழை, வெயில் காலங்களில் தடைபடாமல் செயல்பட்ட தபால்துறை மிகவும் சிறப்பானது. இதை பின்னாளில் அமெரிக்க தபால்துறை போனி எக்ஸ்பிரஸ் மெயில் டெலிவரி என்று நகலாக்கியது.
டேரியஸ் தி கிரேட்டின் மனைவியாக ராணி அதுசா ஷாபானு இருந்தார். இவர் சைரஸ் மற்ற்ம் கஸ்ஸாண்டேனின் மகளாவார். ஸெர்செக்ஸ் தி கிரேட்டின் (கெஷயார் ஷா) தாயாகவும் இருந்தார். இவர் காலத்தில் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அரண்மனையின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டார். டேரியஸ் தி கிரேட்டுக்குப் பிறகு, மூத்த மகன் அர்டோபஸானிஸ் இருக்க இளைய மகன் ஸெர்செக்ஸ் மன்னராக இவரே காரணம் என்று கூறப்படுகிறது. கண்டுபிடிப்புகள் ராணி அதுசாவைப் பற்றி அதிகமான பழைய வரலாறுகளைத் தருகிறது. இவரின் ஆலோசனைகளை மன்னரும் கேட்டுக்கொள்வார்.
490 (B.C.E.) கோமட் என்னும் ஒரு இரவில் டேரியஸ் தி கிரேட் தனது பசர்கடாயியில் முன்னோர்களின் சமாதியில் மரியாதை செய்கிறார். உடன் ஏதென்ஸ்களின் தாக்குதல்களிலிருந்து பெர்ஷிய மக்களைக் காக்க சபதமேற்கிறார். தன் கௌரவம் காக்கப்படும் வரை தான் ஓய்வதில்லை என தன் வீரர்கள் முன் கொக்கரிக்கிறார். பெர்ஷியர்களின் வழக்கப்படி போருக்கு புறப்படும் முன் அடுத்த மன்னன் யார் என்று குறிப்பெழுத வேண்டும். டேரியஸ் தி கிரேட்டும் தனக்கு நகஷ் இ ரோஸ்தம் என்ற இடத்தில் நினைவிடம் அமைக்கவும், தனக்குப் பிறகு, ஸெர்செக்ஸ் மன்னராக வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், போரை முன்னெடுக்கும் முன் நோயால் காலமாகி விடுகிறார்.
488 (B.C.E.) இர்டபாமா சரித்திரத்தில் மிகவும் புகழ்வாய்ந்த வாணிகப் பெண்மனி. பெரும் நிலப்பரப்பை கொண்டவராகவும், அதிக வேலையாட்களைக் கொண்டவராகவும் இருந்தார். ஸெர்செக்ஸ் தி கிரேட் ஆட்சியின் போது இர்டபாமா சொந்தமாக வைன் மற்றும் தானிய தொழிற்கூடத்தை நடத்தினார். வாணிபத்தில் தனக்காக தனியான சிறப்புமிக்க அடையாளம் வைத்திருந்தார். ராஜ குடும்பத்து பெண்களுக்கு இணையாக சொத்து வைத்திருந்ததாக கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. சர்வதேச சரித்திர புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இவரின் சொத்து அக்கால அரை மில்லியன்களுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இர்டபாமாவிற்கு பிறகு, ஐரோப்பா, ரோமில் பெண்கள் சொந்த தொழில் செய்ய தடைவிதித்தார்கள். அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டக்கூடாது என்று இருந்தது.
486 (B.C.E.) டேரியஸ் தி கிரேட்டுக்கும், சைரஸ் தி கிரேட்டின் மகள் அடோஸ்ஸாவுக்கும் பிறந்த பேரரசர் ஸெர்செக்ஸ் (ஸெயார்ஸா) ஆட்சியில் இருந்தார். எகிப்து, பாபிலோனியர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டதால், சகோதரர் அக்காயிமினசை எகிப்துக்கு கவர்னராக்கினார். அமெஸ்ட்ரிஸ் ராணியாக இருந்தார்.

பெர்ஷிய வரலாறு 2



2300 (B.C.E) பல தாக்குதல்களுக்குப் பிறகு, சூசா நகரம் அக்காட் என்னும் மெஸோபொடாமிய மன்னன் வசம் ஆகியது. பின் “உர் பேரரசாக” மாறியது. இலாமைட்டுகள் முன்பு பாபிலோனியர்கள் ஆக்கிரமிப்பு செய்ததற்கு பழி வாங்கும் விதமாக தற்போது தென் மெஸோபொடாமியாவின் உர் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி புதிய இலாமைட்டை மீண்டும் உருவாக்குகிறார்கள். இது நாளடைவில் நியோ அஸ்ஸைரியனாக பரவுகிறது. பாபிலோனியர்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பால் சூசா நகரம் கொடுமையான அஸ்ஸைரியன்களின் பலம் வாய்ந்ததாக மாறுகிறது. சூசா நகரம் பெர்ஷியன் அகாயிமெனிட் எம்பயராகப் பெயர் பெறுகிறது.
1737 (B.C.E.) முதல் தனித்துவம் வாய்ந்த தூதுவராகவும், நல்லவை தீயவைகளை பிரிப்பவராகவும், சமாதானத்தை நிலைநாட்டுபவராகவும், மறுமை நாளில் தீர்ப்பளிப்பவராகவும், சொர்க்கம் (PARADISE என்னும் ஆங்கிலச் சொல் பழைய பெர்ஷிய மொழியிலிருந்து வந்தது.) நரகங்களை நன்மைக்கு ஏற்ப வழங்குபவராகவும் “ஸராதுஷ்ட்ரா” (ZARATHUSHTRA) என்ற தூதுவர் இருந்ததாக நம்பப்பட்டது. இதே கருத்துகள் தான் பின்னாளில் யூத, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களின் கோட்பாடாக ஆனதாக அவர்கள் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் “ஸோரோஸ்ட்ரியனிஸம்” (ZOROASTRIANISM) என்னும் மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இது நாளடைவில் க்ரீக் மற்றும் ரோமர்களிடம் பரவி இன்றும் உலகில் சில இடங்களில் இருக்கிறது. இந்த ஸராதுஷ்ட்ரா தூதர் இனங்களுக்குள்ளும், மதங்களுக்குள்ளும் அதன் கோட்பாடுகளுக்குள்ளும் வேறுபாடு காண்பதில்லை.
                            இந்த தூதரின் பிறந்த நாள் 1767 (B.C.E.) மார்ச் 26 ல் (பெர்ஷிய நாள்காட்டில் ஃபர்வர்தின் 6) வருகிறது. இந்த நாள் ஸோரோஸ்ட்ரியன்களுக்கு மிகவும் சிறப்பான புனித நாளாக கருதப்படுகிறது. இவர்களைப் பற்றி நிறைய கதைகள் இருக்கிறது. எப்போது இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அல்லாஹுவால் சொல்லப்பட்டுவிட்டதோ நமக்கு இதைப்பற்றி மேல் விவரங்கள் தேவையில்லை.
1600 (B.C.E.) பெர்ஷியர்களின் யால்டா கொண்டாத்தத்தில் இருந்து தான் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்ததாக சொல்லப்படுகிறது. குளிர்காலத்தில் நீண்ட இரவான யால்டா இரவில் மறுநாள் வரை கண்விழித்து வணங்குவார்கள். அது டிசம்பர் 22 லிருந்து 25 வரை வரலாம். அந்த நாட்களில் மன்னர்களும், ராணிகளும், பெரும் செல்வந்தர்கள் கூட சாதாரண உடையில் அடையாளம் தெரியாத வகையில் மக்களோடு கலந்திருப்பார்கள். அன்று யாரும் யாருக்கும் உத்தரவிட முடியாது. டிசம்பர் 25 ல் பெர்ஷியர்கள் “மித்ரகானா” என்ற தேவதையை வழிபடுவார்கள். பச்சை நிற இலைகளாலான வளையங்களை வீட்டுக் கதவுகளில் வைத்து, அடுத்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கி இரவு முழுதும் விருந்துகளில் மூழ்கி இருப்பார்கள். நிறைய யூதர்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்த மித்ராயிஸம் மற்றும் ஸோரோஸ்ட்ரியத்திலிருந்து வந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இதுவே உலகின் முதல் சமாதானமான, உலகளாவிய தனி மதமாகக் கருதப்படுகிறது. இந்த மித்ரா(MEHR) தேவதையின் பிறந்தநாள் நாளடைவில் பெர்ஷியா, ரோம் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்குப் பரவியது. இது யூதர்களின் ஹனுக்காஹ் (FESTIVAL OF LIGHT) என்னும் பண்டிகையோடு நெருக்கமாக உள்ளது. இந்த யால்டா மற்றும் மித்ரா பண்டிகைகளிலிருந்து தான் கிறிஸ்துமஸின் மரங்கள், தூய அப்பம் மற்றும் அனைத்து சம்பிரதாயங்களும் வந்ததாக நம்பப்படுகிறது.
                             இறுதியாக யால்டா இரவு இந்தோ ஐரோப்பிய வரலாற்றில் 1600 (B.C.E.) யில் நடந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மெர்ரி மித்ரகானா என்பதே பின்னாளில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று ரோமப் பேரரசில் வாழ்த்தும் முறையானது. நாளடைவில் டிசம்பர் 25 மித்ரா தின கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், அன்றைய தினமே கிறிஸ்து பிறந்த தினமாக கிறிஸ்தவ பாதிரியார்களால் அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1500 (B.C.E.) இந்த காலகட்டத்தில் நோரூஸ் என்னும் புதிய தினம் பெர்ஷிய வரலாற்றில் உயர்ந்த கலாச்சாரமாக இருந்தது. தற்போதைய அகழ்வாராய்ச்சியிலிருந்து நோரூஸ் விழாவை பெர்ஷியர்கள் ஏறக்குறைய 3500 வருடங்கள் கொண்டாடியதாக கருதப்படுகிறது. பெர்ஷிய புத்தாண்டு வருடந்தோறும் சூரியன் மேஷத்தில் நுழையும் மார்ச் 20 ஆகும். இது மிகச் சரியாக பெர்ஷியர்களின் சோலார் நாட்காட்டி மூலம் புராதன வானாராய்ச்சி வழியாக கணக்கிடப்படுகிறது. நோரூஸ் கொண்டாட்டங்கள் முடிவு மற்றும் மறுபிறப்பு என்ற இரு கோணங்களில் கொண்டாடப்படுகிறது. இதிலும் நிறைய கதைகள் இருக்கிறது. அது தேவையில்லை.
728 (B.C.E.) இளவரசர் டியோசிஸ் என்பவர் முதல் மீடியன் பேரரசில் ராஜாவாக உலகளாவிய ஈரானில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அது ஒரு பெரிய ஒருங்கினைக்கப்பட்ட நிர்வாகமாக இருக்கிறது. அதன் தலைநகரம் எக்படனா (தற்போதைய ஈரானின் ஹமேதான்) ஆகும். ராஜா டியோசிஸுக்குப் பிறகு, அவரின் பேரர் ஹுவக் ஷத்ரா என்பவர் மன்னராகிறார். அவர் காலத்தில் பேரரசு மிகவும் உச்சத்தில் இருக்கிறது.
693 (B.C.E.) மிகவும் புகழப்பட்ட சரித்திரப்புகழ் வாய்ந்த பெர்ஷியர்களின் சூசா நகரம் அஷுர் (B)பானிபல் என்பவரின் இராணுவத்தால் நிர்மூலமாக்கப் படுகிறது. அவர்கள் தலைநகரம் இக்படானா வரை வந்து மிடீயன் பேரரசை நாசமாக்கினார்கள். அஸ்ஸைரியன்கள் பரந்த இராணுவத்தை நிர்மாணித்து மற்ற சமூகங்களிலிருந்து பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் வளம் கொள்ளையடிக்கப்பட்டு அவர்களால் மீண்டும் நிலைகொள்ள முடியாமல் போனது. அஷுர் பானிபல்லின் இராணுவம் பெரும்பாலானவர்களை யூதர்கள் உட்பட மொத்த ஈரானியர்களையும் அடிமைப்படுத்தினர். அவர்கள் இலாம் பேரரசை சரித்திரத்தில் “எரிந்த நகரம்” ஆக்கினார்கள். 2000 ஆண்டுகால இலாமைட் பேரரசு முடிவுக்கு வந்தது.
678 (B.C.E.) மீடியன்கள் மத்திய வடமேற்கு பகுதியிலும், பார்ஸிகள் தென் மற்றும் தென்மேற்குப் பகுதியிலும், பார்த்தியன்கள் தெற்கு மற்றும் வட தெற்கு பகுதியிலும் மூன்று இனங்களாக பிரிந்து ஒரே பேரரசாக ஐக்கிய மீடியன் பேரரசு என்று உருவாக்கிக் கொண்டு, கொடுமையாளர்களான அஸ்ஸைரியன்களை எதிர்த்தார்கள். மீடியன்களுக்கும், பெர்ஷியர்களுக்கும் இடையேயான கூட்டு அஸ்ஸைரியன்களின் தாக்குதலைத் தவிர்த்தது. அஸ்ஸைரியன்களின் தோல்விக்குப் பிறகு, மீடியன்கள் அஸ்ஸைரியன்களின் பகுதிகளில் குடியேறி மேலும் அவர்கள் வளரவிடாமல் தடுத்தனர். பெர்ஷியாவின் சைரஸ் மீடியன் ஆட்சியைக் கைப்பற்றி ஈரானை பேரரசாக்கி ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, உலகின் மாபெரும் பேரரசாக உயர்த்தினார். தென்மேற்கு பெர்ஷியா பகுதிகள் ஒருங்கிணைந்து அக்காயிமெனிட் பெர்ஷியன் பேரரசாக மாறியது.
                          மீடியன்கள் தான் ஈரானிய மக்கள் அவர்கள் வட, மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும், தற்போதைய ஈரானின் டெஹ்ரான், ஹமிதான், அஜர்பைஜான், வட இஸ்பஹான், ஸான்ஜன் மற்றும் குர்திஸ்தான் பகுதிகளில் வாழ்கின்றனர். கிரேக்கர்கள் மத்தியில் இந்த பகுதிகள் “மீடியா” என்று அறியப்படுகின்றன. அஸ்ஸைரியன்களால் நாசமாக்கப்பட்ட சூசா நகரம் மீண்டும் பெர்ஷிய அக்காயிமெனிட் பேரரசால் புதுப்பிக்கப்பட்டு ஆட்சியாளர்களால் குளிர்கால தங்குமிடமாகவும், அரசு விழாக்கள், கூட்டங்கள் நடக்கும் இடமாகவும் ஆனது.
584 (B.C.E.)  பெர்ஷியாவின் அக்காயிமெனிட் பேரரசின் சிறந்த அரசராக சைரஸ் தி கிரேச் என்பவர் திகழ்ந்தார். இவர்தான் உலகின் முதல் மனித உரிமைகள் சட்டமான “சைரஸ் சிலிண்டர்” என்ற புத்தகத்தை எழுதினார். மன்னர் அஸ்ட்யாகிஸ் என்பவரின் சரித்திரப் புகழ் வாய்ந்த மகள் மண்டானா என்பவர் இளவரசியாக இருந்தார். பின்னாளில் இவர் அன்ஷானின் கேம்பிசிஸின் ராணியாகவும் இருந்தார். சிறந்த மன்னரான சைரஸ் தி கிரேட்டின் தாயாராகவும் இருந்தார். கிரேக்க ஆராய்ச்சியாளர் ஹிரோடோடசின் தகவல் படி, மன்னர் அஸ்டியாகிஸின் கனவில் மகி என்னும் மந்திரவாதி குறிக்கிட்டு, அவரின் பேரன் அவரை ஆட்சியிலிருந்து அகற்றி விடுவான் என்று கூறினான். அவர் தனது பணியாள் ஹர்பகஸை அழைத்து தனது பேரன் சைரஸ் தி கிரேட்டை கொன்று விடுமாறு கூறுகிறார். ஹர்பகஸ் குழந்தை சைரஸ் தி கிரேட்டை கொல்லாமல், மறைத்து ஆடு மேய்க்கும் கூட்டத்தினரிடம் மித்ரிடேட்ஸ் என்னும் பெயருடன் வளர்க்க விடுகிறார். தான் ராஜ வம்சத்தை சேர்ந்தவன் என்பதை அறியாமல் சைரஸ் தி கிரேட் வளருகிறார். பின்னாளில் கனவு பலிக்கும் வண்ணம் அதே சைரஸ் தி கிரேட் அஸ்ட்யாகிஸுடன் போரிட்டு வெல்கிறார். ராணி மண்டானா 559 (B.C.E.) யில் இறந்ததாக கூறப்படுகிறது. இன்றும் இவரது பெயரில் நறுமணப் பொருட்கள், உடைகள் மற்றும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. பிறகு, வந்த மன்னன் டேரியஸ் தி கிரேட் தன் மகளுக்கு மண்டானா என்று பெயரிட்டான்.
560 (B.C.E.) சைரஸ் தி கிரேட் அஸ்ட்யாகிஸை வென்று மீடியன் மன்னனாகிய பின் பெர்ஷிய பேரரசை நிறுவுகிறார். ஒரே உலகம் என்ற கோட்பாட்டின் கீழ் எந்த மொழி, இனமானாலும் ஒரு ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.
559 (B.C.E.)  மீடியனின் மன்னன் அஸ்டியக் ஷாவின் மகள் அமிடிஸ் ஷாபானு என்பவர் இளவரசி ஆனார். இவரைப்போல பல பாரசீக இளவரசிகளைப் பற்றி கதைகள் உண்டு. அது நமக்கு தேவையில்லை. இவர் பிறகு, சைரஸ் தி கிரேட்டின் மனைவியாகவும், பெர்ஷிய பேரரசின் ராணியாகவும் ஆனார். சைரஸ் தி கிரேட் கலை, மொழி, மதம் ஆகியவை உலகம் முழுக்க பொதுவானவை என்ற கருத்தை கொண்டிருந்தார்.
550 (B.C.E.)  இந்த அக்காயிமெனிட் பெர்ஷியப் பேரரசு மொழி, கலை மற்றும் மதங்களைக் கடந்து மூன்று கண்டங்களிலும், 25 நாடுகளிலும் பரவியது. உலகின் கிழக்கு மேற்கை தொடர்பு கொண்டது. மற்ற பகுதிகளை சிறிய மன்னர்கள் ஆண்டாலும், அனைவரும் ஷாஹன்ஷா என்னும் கிங்க் ஆஃப் கிங்க் என்னும் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்தனர். உலகின் முதல் கூட்டாட்சியாக இருந்தது. சைரஸ் மிக உன்னதமாக அதை நிர்வகித்து தான் கிரேட் என்னும் பட்டத்திற்கு தகுதியானவர் என்பதை நிரூபித்தார். பெர்சிபாலிஸ் என்று மறு நிர்மாணம் செய்தார்.
சைரஸ் தி கிரேட் ஆட்சியில் புகழ் வாய்ந்த பாண்டியா அர்டிஷ்பாத் என்பவள் சிறந்த பெர்ஷிய கமாண்டராக இருந்தாள். அவள் ஜெனரல் அர்யாஸ்ப் என்பவரின் மனைவி ஆவாள். நியோ பாபிலோனிய போரில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்தாள். புராதன இராணுவ வரலாற்றில் இவருக்கென தனி இடமுண்டு. அன்றைய ஆசியாவின் பேரழகியாக இருந்த இவர் எந்நேரமும் தனது முகத்தை ஆண்களிடமிருந்து மறைத்து அவர்களின் உணர்ச்சியை தூண்டாதவராக இருந்தார். புராதன இராணுவத்தில் சைரஸ் தி கிரேட்டின் இராணுவம் புகழ் வாய்ந்தது. அவர்கள் 7 வயதிலிருந்தே பயிற்சி பெற்றிருந்தார்கள். அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆன பயிற்சியாக இருந்தது. தூதர் ஸராதுஸ்ட்ராவின் கட்டளைப் படி இருந்தார்கள்.